மூச்சு வாங்கியது
அவர் 19வது ஓவரில் 4வது பந்தில் 2 ரன் ஓடி முடித்த பின் அயற்சியால், மூச்சு வாங்கி நின்றார். அதன் பின் 5வது பந்திலும் 2 ரன் ஓடி முடித்து விட்டு நிற்கவே சிரமப்பட்டார் தோனி. அதன்பின் பிசியோதெரபிஸ்ட் அவருக்கு முதலுதவிப் பயிற்சிகள் அளித்தார்.
ரசிகர்கள் பதற்றம்
அதன் பின் தோனி சாதாரணமாக நின்று ஆடினாலும், ஏன் தோனிக்கு இப்படி ஆனது என ரசிகர்கள் பதறினார்கள். தோனி இதுபோல ரன் ஓட சிரமப்படுவது அபூர்வம். எனினும், இந்தப் போட்டியில் தோனி ஹெல்மட்டில் பலமாக அடிவாங்கினார். அது தான் இந்த சிரமத்துக்கு காரணமா?
ஹெல்மட்டில் தாக்கிய பந்து
17வது ஓவரின் 4வது பந்தில், ஆர்ச்சர் வீசிய பவுன்சரை கணிக்கத் தவறிய தோனி, பந்தை ஹெல்மட்டில் வாங்கினார். அதனால், ஹெல்மட்டில் பலமாக தாக்கியது பந்து. எனினும், தோனி அப்போது விரைவாக ரன் ஓடினார். அடுத்து 2 ஓவர்கள் வரை தோனி நன்றகாவே ஓடி, ஓடி ரன் எடுத்தார்.
ரசிகர்கள் நிம்மதி
போட்டி முடிந்த பின் தோனி சுறுசுறுப்பாகவே இருந்தார். சோர்ந்து காணப்படவில்லை. எனவே, தோனி ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். 20வது ஓவரில் தோனி ஆட்டமிழந்த பின் அடுத்த பந்து நோ-பால் என சர்ச்சை எழுந்தது. அம்பயர் நோ-பால் கொடுக்க மறுக்கவே தோனி களத்துக்கு சென்று வாக்குவாதம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.