நோ-பால் சர்ச்சை
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் பேட்ஸ்மேன் மார்புக்கு மேல் பந்தை ஃபுல் டாஸாக வீசினார் பென் ஸ்டோக்ஸ். அதற்கு அம்பயர் முதலில் நோ-பால் கொடுத்து விட்டு பின்னர் அதை திரும்பப் பெற்றார்.
எல்லை மீறிய தோனி
இதனால், பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த சம்பவத்தின் போது தோனி ஆட்டமிழந்து களத்துக்கு வெளியே இருந்தார். எனினும், எல்லை மீறி களத்துக்குள் நுழைந்து அம்பயருடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் தோனி. இது விதிமீறல் என்பதால் தோனிக்கு போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
கேப்டன்கள் செய்தது சரியல்ல
ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மார்க் வாஹ் இது குறித்து கூறுகையில், ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் தரும் அழுத்தம் மற்றும் ஐபிஎல்-இல் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் அதிகமான பணம் ஆகியவை இருந்தாலும், இரண்டு சம்பவங்களில் கேப்டன்கள் தோனி மற்றும் அஸ்வின் ஈடுபட்டது சரியல்ல என கூறியுள்ளார்.
அழுத்தமும், பணமும்
தோனி அம்பயருடன் எல்லை மீறி வாக்குவாதத்தில் ஈடுபட்டது மற்றும் அஸ்வின் மன்கட் ரன் அவுட் செய்தது போன்றவற்றை குறிப்பிடும் மார்க் வாஹ், அதற்கு உரிமையாளர்கள் வெற்றி பெற்றே தீர வேண்டும் என தரும் அழுத்தமும், பணமும் தான் காரணம் என மறைமுகமாக கூறுகிறார்.
சரி தானோ?
அதானே.. இந்தியா எத்தனையோ சர்வதேச போட்டியில் அம்பயர் அளித்த தவறான முடிவால் தோல்வி அடைந்துள்ளது. அப்போது தோனி இது போல அம்பயருடன் சண்டை போட்டு நாம் பார்த்ததுண்டா? மார்க் வாஹ் சொல்றது சரி தானோ?