புதிய சாதனை
ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் இடையே நடந்த போட்டியில் கிறிஸ் கெயில் 47 பந்துகளில் 79 ரன்கள் அடித்தார். இந்தப் போட்டியில் 6 ரன்களை கடந்த போது கெயில் புதிய சாதனை செய்தார்.
வார்னரை முந்தினார்
ஐபிஎல் தொடரில் 113 போட்டிகளில் 112 இன்னிங்க்ஸ்களில் 4000 ரன்களை கடந்தார் கிறிஸ் கெயில். ஐபிஎல் வரலாற்றில் மிக விரைவாக 4000 ரன்களை எட்டி இருக்கும் கெயில், வார்னரை முந்தி இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.
ஓரங்கட்டிய கெயில்
4000 ரன்களை வார்னர் 114 இன்னிங்க்ஸ்களிலும், விராட் கோலி 128 இன்னிங்க்ஸ்களிலும், ரெய்னா மற்றும் கம்பீர் 140 இன்னிங்க்ஸ்களிலும் கடந்துள்ளனர். இவர்கள் எல்லோரையும் ஓரங்கட்டி இருக்கிறார் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில்.
வார்னருக்குப் பின்
மேலும் ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் கெயில் 4000 ரன்களை கடந்த ஒன்பதாவது வீரர் ஆவார். மேலும், வெளிநாட்டு வீரர்களில் இரண்டாவதாக இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். முதலில் இந்த மைல்கல்லை எட்டிய வெளிநாட்டு வீரர் வார்னர்.
கெயில் சதம்
இது தவிர கெயில் ஐபிஎல் தொடரில் 5 சதம் அடித்துள்ளார். இதுவே ஐபிஎல் தொடரில் அதிகம். மேலும், 2013இல் கெயில் அடித்த 175 ரன்களே ஐபிஎல் தொடரில் ஒரே போட்டியில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ரன் ஆகும்.