இங்கிலாந்து வீரர்கள் பொங்கினர்
இங்கிலாந்து வீரரான ஜோஸ் பட்லரை, அஸ்வின் ரன் அவுட் செய்த விதத்தை கண்டு இங்கிலாந்து வீரர்கள் ட்விட்டரில் பொங்கி உள்ளனர். இங்கிலாந்து ஒருநாள் அணியின் கேப்டன் இயான் மார்கனும் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து இருப்பது, இது எத்தனை பெரிய தாக்கத்தை கிரிக்கெட் உலகில் ஏற்படுத்தி இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதாய் அமைந்தது.
|
நம்ப முடியவில்லை
இயான் மார்கன் தன் பதிவில், "நான் என்ன பார்க்கிறேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இளம் சிறுவர்களுக்கு தவறான உதாரணமாக இது அமைந்துள்ளது. நேரம் வரும் போது அஸ்வின் இது குறித்து வருந்துவார்." என கூறியுள்ளார்.
|
அதிர்ச்சியாக இருந்தது
மற்றொரு இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் கூறுகையில், "அஸ்வின்.. அது அதிர்ச்சியாக இருந்தது. அதைப் பார்க்க மிகவும் ஏமாற்றமாக இருந்தது." என கூறியுள்ளார்.
மைக்கேல் வான் கருத்து
இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வான் கூறுகையில், "ஜோஸ் பட்லர் எச்சரிக்கப்பட்டு இருந்தால்.. நல்லது. அப்படி இல்லையென்றால் முதல் முறையாக அஸ்வின் தறிகெட்டு நடந்து கொண்டுள்ளார். இனிமேல், இது அடிக்கடி நடப்பதை நாம் பார்க்கலாம்." என கூறியுள்ளார்.
|
மோசமான செயல்
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த "மிக மோசமான செயல், தவறான உதாரணம்" என குறிப்பிட்டுள்ளார்.