டி20 கிரிக்கெட் தொடர்
இந்த முறையும் இந்திய டி20 அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்றோர் சேர்க்கப்படவில்லை. ஹர்திக் பாண்ட்யாவின் தலைமையில் மீண்டும் இளம் படை களமிறங்கவுள்ளது. இதற்காக அனைத்து வீரர்களும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வரவழைக்கப்பட்டு பயிற்சி மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தான் ருதுராஜ் கெயிக்வாட் விலகியுள்ளார்.
என்ன காயம்
ருதுராஜ் கெயிக்வாட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இது குணமாக சில நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்பதாலும் முழுவதுமாக விலகியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள என்.சி.ஏ அதிகாரிகள், ருதுராஜுக்கு ஸ்கேன்கள் எடுக்கவுள்ளோம். அதற்கேற்றார் போல அவரின் தேர்வு இருக்கும் எனக்கூறியுள்ளனர்.
3வது வீரர் காயம்
ருதுராஜ் கெயிக்வாட்டை போலவே நட்சத்திர வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவரும் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களும் பெங்களூருவில் தான் உள்ளனர். மிகவும் குறைவான வாய்ப்புகளை பெற்று வரும் இவர்கள், இப்படி காயம் எனக்கூறி விலகுவது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மாற்று வீரர் யார்?
எனினும் ருதுராஜுக்கு இந்த தொடரில் மாற்று வீரர் அறிவிக்கப்படாது எனத்தெரிகிறது. ஏனென்றால் இந்திய அணியில் ஏற்கனவே பிரித்வி ஷா, இஷான் கிஷான், சுப்மன் கில், தீபக் ஹூடா என 4 ஓப்பனிங் வீரர்கள் இருக்கின்றனர். எனவே கெயிக்வாட்டிற்கு மாற்றாக ஒரு பவுலரை சேர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.