உலகக்கோப்பைக்கான ஏற்பாடு
50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு தயாராவதற்கான பணிகளில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. பேட்டிங்கை பொறுத்தவரையில் வீரர்கள் நல்ல ஃபார்மில் உள்ள போதும், பவுலிங் படை சற்று கவலை அளிக்கிறது. முன்னணி வீரர்கள் பலரும் காயத்தின் காரணமாக விலகியதால், அனுபவ வீரர்கள் இல்லாமல் இந்திய அணி தவித்து வருவது தெளிவாக தெரிகிறது.
பும்ராவின் முதுகுவலி
முன்னணி பவுலரான ஜஸ்பிரித் பும்ரா இன்னும் முதுகுவலியில் இருந்து குணமடையவில்லை. இதே போல பிரஷித் கிருஷ்ணா, யாஷ் தயால் போன்றவர்களும் காயமடைந்துள்ளனர். தீபக் சஹார், ஹர்ஷல் பட்டேல் மற்றும் ஷர்துல் தாக்கூர் சமீபத்தில் தான் குணமடைந்து வந்த சூழலில் இருவரின் உடற்தகுதி மீண்டும் கேள்விக்குறியாக உள்ளது.
சாபா கரீம் சாடல்
இந்நிலையில் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமி என்னதான் செய்கிறது என சாபா கரீம் கேட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இது என்.சி.ஏவின் பணிகள் ஆகும். அணி நிர்வாகம், தேர்வுக்குழு, கேப்டன்களுடன் சேர்ந்து என்.சி.ஏ அதிகாரிகள் தான் ஒரு 10 - 12 வேகப்பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அவர்களை தொடர்ந்து தயார் செய்து, சரியான உடற்தகுதியிலேயே வைத்திருக்க வேண்டும்.
4 சூப்பர் வீரர்கள்
அணிக்கு தேவை என்ற சூழலில் வீரர்களை முழு ஃபிட்னஸுடன் என்.சி.ஏ அனுப்ப வேண்டும். ஆனால் அந்த பணியை செய்யவில்லை. 140க்கு மேல் வீசக்கூடிய இளம் பவுலர்கள் இருக்கின்றனர். ஷிவம் மாவி, கார்த்திக் தியாகி,குல்தீப் சென், ஆவேஷ் கான் போன்றவர்கள் உள்ளூர் போட்டிகளில் 140கிமீ வேகத்தில் வீசுகின்றனர். அவர்களுக்கு வாய்ப்பை கொடுத்து தயார் படுத்த வேண்டும் என சாபா கரீம் கூறியுள்ளார்.