டிம் பெயின் விளக்கம்
இந்த தோல்வி குறித்து தற்போது விளக்கமளித்த ஆஸி, கேப்டன் டிம் பெயின், இந்தியா அணிக்கு எதிராக ஆடும் போது, சவாலான ஒரு விஷயம் என்னவென்றால், ஒன்றுமே இல்லாத விஷயத்தை பெரிதுப்படுத்தி தேவையில்லாமல் கவனத்தை சிதறடிப்பார்கள். இந்த தொடரில் அதனால் தான் நாங்கள் தோற்று விட்டோம்.
சர்ச்சை கருத்து
இதற்கு சிறந்த உதாரணம், பிரிஸ்பேனில் முதலில் கொரோனா அச்சுறுத்தல்கள் அதிகமாக உள்ளதாக கூறி முதலில் இந்திய வீரர்கள் விளையாமாட்டோம் என்று சொன்னார்கள். பின்னர் அங்கு தான் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதனால் கடைசி டெஸ்ட் போட்டி எங்கு நடக்கப்போகிறது என்ற குழப்பம் எங்களுக்கு ஏற்பட்டது. எனவே தேவையற்ற விவகாரங்களை பெரிதுபடுத்தி குழப்புவதில் இந்திய வீரர்கள் கில்லாடிகள் எனக்கூறினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
முட்டாள் தனமான கருத்து
இந்நிலையில் இதற்கு பதிலளித்து முன்னாள் வீரர் சாபா கரீம், டிம் பெயின் கூறியது சிறுபுள்ளைத்தனமானது மட்டுமல்ல, மிகப்பெரும் முட்டாள்தனமான ஒன்று. அவர்களின் தவறுகளை மறைப்பதற்கு இது போன்ற முயற்சிகளை செய்து வருகிறார். சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணிகளுக்கு சொந்த நாட்டு அணிகள் தான் இதுபோன்ற கவன சிதறல்களை கொடுக்கும். இந்திய அணி பலமுறை அதை எதிர்கொண்டுள்ளது. ஆனால் டிம் பெயின் அப்படியே மாற்றிக் கூறுகிறார்.
பதிலடி
ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கரே இந்திய வீரர்கள் அற்புதமாக விளையாடினார்கள் என்பதை ஒப்புக்கொண்டார். அவர் தோல்வி குறித்து குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. ஆனால் திடீரென கேப்டன் பெய்ன் இப்படி கூறுவது ஆச்சரியம் அளிக்கிறது என சாபா கரீம் பதிலடி கொடுத்துள்ளார்.