வங்கதேச வீரர்
இந்த நிலையில் வங்கதேச வீரர் சபீர் ரஹ்மானுக்கும், தோனிக்கும் இடையிலான ஒரு சுவாரஸ்ய சம்பவம் குறித்து சபீரே விளக்கியுள்ளார். இதுகுறித்து சபீர் கூறுகையில், 2016ல் பெங்களூரில் நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின்போது என்னை அழகாக ஸ்டம்ப் செய்து விட்டார் தோனி. இந்த நிலையில் கடந்த ஆண்டு அதாவது 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த இந்தியா -வங்கதேசம் இடையிலான டி20 உலகக் கோப்பைப் போட்டியின்போதும் தோனிக்கு அதே மாதிரியான சான்ஸ் கிடைத்தது.
தப்பினேன்
ஆனால் இந்த முறை நான் வேகமாக கிரீஸுக்குள் வந்து விட்டேன். மின்னல் வேகத்தில் நான் வந்ததை தோனி எதிர்பார்க்கவில்லை. கிரீஸுக்குள் வந்த வேகத்தில் இந்த முறை உங்களுக்கு சான்ஸ் கிடையாது என்று நான் தோனியைப் பார்த்து சிரித்தபடி கூறினேன். அவரது முகத்திலும் புன்னகை என்றார் சபீர். அந்த பந்தை உண்மையில் லெக் ஸ்பின்னர் சஹல் போட்டார்.
முக்கிய திருப்புமுனை
பந்தை வாங்கி அடிக்க கிரீஸை விட்டு வெளியே போனார் சபீர். அந்த சமயத்தைப் பயன்படுத்தி ஸ்டம்ப் செய்யப் பார்த்தார் தோனி. ஆனால் வேகமாக திரும்பி தப்பினார் சபீர். இந்த சம்பவத்தைத்தான் தற்போது ஒரு பேஸ்புக் நேர்காணலில் பகிர்ந்துள்ளார் சபீர் ரஹ்மான். அந்தப் போட்டியில் சபீர் ரஹ்மான் 15 பந்துகளில் 20 ரன்கள் குவித்தார். போட்டியின் முக்கியத் திருப்புமுனையாக அந்த ரன்களும் அமைந்தன.
சபீர் தோனியின் ரசிகர்
சபீர் தோனியின் பெரிய ரசிகரும் கூட. உங்க பேட்டோட ரகசியம் என்ன. அதை எனக்குக் கொடுங்க என்றும் அவர் தோனியிடமே கேட்டுள்ளார். இது குறித்து சபீர் கூறுகையில், அவர் எதை அடித்தாலும் அது சிக்ஸருக்குப் பறக்குது. நாங்கள் எல்லாம் சிங்கிள் அடிக்கவே திணறுகிறோம். இதை தோனியிடமே நான் கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதில் "நம்பிக்கை".
தோனியின் நிபந்தனை
இதையடுத்து உங்க பேட்டைக் கொடுங்க, அதை வைத்து இந்தியாவுக்கு எதிராக விளையாட வேண்டும் என்றேன். அதற்கு அவர் நான் பேட்டைத் தர்றேன். ஆனால் அதை வைத்து இந்தியாவுக்கு எதிராக விளையாடக் கூடாது என்று நிபந்தனை போட்டார். நானும் அதற்கு ஒத்துக் கொண்டேன். வேறு அணிக்கு எதிராக அந்தப் பேட்டை வைத்து விளையாட ஆவலாக காத்திருக்கிறேன் என்று கூறினார் சபீர் ரஹ்மான்.