அவர் திறமையை அவரே மதிக்கவில்லை
சச்சின் திறமையை நான் விமர்சிக்கவில்லை. ஆனால் அவரே அவரது திறமையை நியாயப்படுத்தவில்லை. அவரால் முடியும் என்ற நிலை இருந்தும் கூட அதைச் செய்ய அவர் முன்வரவில்லை.
முன்னாடியே செய்திருக்கலாம்
சச்சின் பலமுறை 200, 300, ஏன் 400 ரன் எடுக்கவெல்லாம் வாய்ப்புகள் இருந்தன. ஆனால் அதைச் செய்யவில்லை அவர். அவர் செய்த சில சாதனைகளைக் கூட அவர் முன்கூட்டியே செய்திருக்க முடியும்.
மும்பை கிரிக்கெட்டில் மூழ்கி விட்டார்
மும்பை அளவிலான கிரிக்கெட்டிலேயே மூழ்கியிருந்தார் சச்சின். அதில் மாட்டிக் கொண்டார். சர்வதேச அளவிலான கிரிக்கெட்டுக்கு அவர் மாறவில்லை. இரக்கமே இல்லாமல் பேட் செய்யும் முறைக்கு அவர் மாரறவில்லை.
ரிச்சர்ட்ஸுடன் பழகியிருக்கலாம்
உள்ளூர் வீரர்களுடன் நேரம் செலவிட்டதற்குப் பதில் பேசாமல் அவர் விவியன் ரிச்சர்ட்ஸுடன் நிறைய நேரம் செலவிட்டிருக்கலாம். அது அவரது கிரிக்கெட்டுக்கு உதவியாக இருந்திருக்கும்.
செஞ்சுரி அடிக்க மட்டும் சச்சின் தேவையா?
பெரிய சாதனைகளைப் படைத்திருக்க வேண்டிய வரர் சச்சின். ஆனால் அவர் சதம் மட்டுமே அடிக்கத் தெரிந்தவராக வலம் வந்தார். இரட்டை சதம் போடுவது எப்படி, 300 ரன்களைக் குவிப்பது எப்படி, 400 ரன்கள் எடுப்பது எப்படி என்பது குறித்து அவர் யோசிக்கவில்லை.
ஷேவாக் மாதிரி ஆட வேண்டும்
என்னைக் கேட்டால், சச்சின் டெண்டுல்கர், ஷேவாக் மாதிரி ஆட வேண்டும் என்று நான் அறிவுரை சொல்வேன். டெக்னிக்கலாக சச்சின் நல்ல திறமையாளர். ஆனால் அதை சதம் போட மட்டுமே பயன்படுத்தியது துரதிர்ஷ்டவசமானது.