சிறப்பான ஏற்பாடு
சச்சினின் கடைசி போட்டியை மறக்க முடியாத ஒன்றாக ஆக்க பெங்காள் கிரிக்கெட் வாரியம் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
அமிதாப், ஷாருக்
சச்சினின் கடைசி ஆட்டத்தை காண வருமாறு பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களுக்கு கெட்ட செய்தி
ஈடன் கார்டனில் சச்சின் விளையாடும் இறுதி ஆட்டத்தை காண ரசிகர்களுக்கு வெறும் 5,000 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் பல்வேறு கிளப் உறுப்பினர்கள், பிரபலங்களுக்காக 67,000 இருக்கைகள் ஒதுக்கப்படுகிறது.
இதயத்துடிப்பு நின்றது போன்று
சச்சின் ஓய்வு பெறுகிறார் என்ற செய்தியைக் கேட்டதும் எனது இதயத் துடிப்பு நின்றது போன்று உணர்ந்தேன். இந்திய கிரிக்கெட்டின் இதயத் துடிப்பு நின்றுவிட்டது. அவரையும், அவரது ஆட்டத்தையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை என்றார் அமிதாப் பச்சன்.