பாதுகாப்பு உள்ளதா?
ஐபிஎல் போட்டிகளில் வேகம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த சன்ரைசர்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையிலான போட்டியில் கீரன் பொல்லார்ட் அடித்த த்ரோ ஒன்று விஜய் சங்கரின் முகத்தை பதம் பார்த்தது. ஆயினும் அதுகுறித்து கவலைகொள்ளாமல் அவர் தனது ஓட்டத்தை முடித்தார்.
சச்சின் கேள்வி
இந்த நிகழ்வை தனது டிவிட்டர் பக்கத்தில் சுட்டிக் காட்டியுள்ள முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஐபிஎல் போட்டிகள் வேகமாக நடைபெறுவதாகவும் ஆனால் பாதுகாப்பாக நடைபெறுகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்திய நிகழ்வு இதற்கு மோசமான சாட்சியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் அறிவுறுத்தல்
ஸ்பின் அல்லது வேகப்பந்து வீச்சு எதை எதிர்கொண்டாலும் பேட்ஸ்மேன்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள சச்சின் டெண்டுல்கர், இந்த விஷயத்திற்கு ஐசிசி முதலில் கவனம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
நினைவு கூர்ந்த ரவி சாஸ்திரி
மேலும் புல் டாஸ் பௌலிங்கில் கவாஸ்கர் அடித்த பந்து சச்சின்மீது பட்டதை இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நினைவு கூர்ந்துள்ளார். நல்ல வேளையாக அது மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்தவில்லை என்றும் ரவி சாஸ்திரி கமெண்ட் செய்துள்ளார். இதையும் சச்சின் டெண்டுல்கர் டேக் செய்துள்ளார்.