உத்தரவாதம் அல்ல
அர்ஜுனுக்கு இந்த தொடரில் கிடைத்த வாய்ப்பு குறித்து பேசிய சச்சின், "விளையாட்டில் எதுவும் உத்தரவாதம் அல்ல. உங்களுக்கு கிடைத்த வாய்ப்பில் நீங்கள், உங்கள் சிறப்பான பங்களிப்பை அளித்து காட்ட வேண்டும்" என்றார்.
ரசிகர்கள் கொண்டாடுவார்கள்
"இந்த விளையாட்டில் தான் மக்கள் உங்களை, உங்கள் செயல்பாட்டை பின்தொடர்வார்கள். நீங்கள் சிறப்பாக செயல்பட்டால், உலகத்தின் உச்சியில் நீங்கள் இருப்பீர்கள்" என ரசிகர்கள் எப்படி சிறந்த வீரர்களை கொண்டாடுவார்கள் என்பதை தன் அனுபவத்தில் இருந்து கூறினார் சச்சின்.
அண்டர் 19 டெஸ்ட் தொடர்
அர்ஜுன் டெண்டுல்கர் இந்திய அண்டர் 19 அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்கு எதிராக ஆடினார். ஆனால், அதில் தன் திறமையை நிரூபிக்கத் தவறினார் இந்த இளம் வீரர். அந்த தொடரில் 14 ரன்கள் மற்றும் 3 விக்கெட்கள் மட்டுமே எடுத்தார் அர்ஜுன்.
இன்னொரு நாள்
அதற்கடுத்து மும்பை டி20 தொடரில் அர்ஜுன் பங்கேற்கிறார். இந்நிலையில், சச்சின் சில முக்கிய அறிவுரைகளை கூறினார். "ஒருவேளை அர்ஜுனுக்கு வெற்றி கிடைக்காவிட்டாலும், இன்னொரு நாள் இருக்கிறது. அர்ஜுன் மீண்டும் உறுதியுடன் திரும்ப முடியும்" என்றார்.
இது தான் முக்கியம்
வெற்றி, தோல்வியை தாண்டி கிரிக்கெட்டில் எது மிகவும் முக்கியம் என்பது குறித்து கூறினார். மேலும், "அவர் கிரிக்கெட் மீது ஆர்வத்துடனும், விருப்பத்துடனும் இருக்க வேண்டும். அது தான் எனக்கு முக்கியம்" என்றார் சச்சின்.
அர்ஜுன் மீது அழுத்தம்
அர்ஜுன் டெண்டுல்கரின் தந்தை சச்சின் என்ற ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் என்பதால் பெரும் அழுத்தமும், எதிர்பார்ப்பும் இருக்கிறது. அதை மீறி அர்ஜுன் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.