சொந்தங்களை இழந்த வீரர்கள்
ஐபிஎல் தொடர் 40 போட்டிகளை கடந்து பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத நிலையில், காயங்களும் இழப்புகளும் கூட நடந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை பஞ்சாப் வீரர் மன்தீப் சிங்கின் தந்தை உயிரிழந்த நிலையில், நேற்றைய தினம் கேகேஆர் அணி வீரர் நிதீஷ் ராணாவின் மாமனார் உயிரிழந்துள்ளார்.
சச்சின் பாராட்டு
ஆயினும் இந்த வீரர்கள் தங்களது போட்டிகளை ஆடி ஓரளவிற்கு நல்ல ஸ்கோரையும் பெற்றுள்ளனர். இந்நிலையில் இவர்களின் இந்த செயலுக்கு முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இத்தகைய இழப்புகள் வலியை தந்துள்ள நிலையில், இறுதியாக அவர்களை சந்திக்க செல்லாதது மேலும் வலியை தரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்டம் குறித்து பாராட்டு
இந்த இழப்பிலிருந்து சந்தீப் மற்றும் மன்தீப் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீண்டுவர பிரார்த்தனை செய்வதாகவும் சச்சின் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்களது நேற்றைய ஆட்டம் குறித்தும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தந்தையை இழந்த சச்சின்
கடந்த 1999 உலக கோப்பை போட்டியின்போது டெண்டுல்கரின் தந்தை உயிரிழந்தார். இதையடுத்து இந்தியா திரும்பிய சச்சின் டெண்டுல்கர், சடங்குகளை முடித்துக்கொண்டு உடனடியாக பிரிட்டன் சென்று மீண்டும் போட்டிகளில் பங்கேற்றார். மேலும் கென்யாவிற்கு எதிரான போட்டியில் சதமடித்து அவர் தனது அஞ்சலியை செலுத்தினார்.