ஜெயசூர்யா இறந்தார்?
இப்படித் தான் சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை கிளப்பியது. கூடவே, அந்த செய்தி உண்மை தான் என்று கனடாவில் உள்ள இலங்கை தூதரகமும் மரணத்தை உறுதி செய்ததாக வேறு தகவல். டொரண்டோ நகரில் நாளை நடக்கும் இறுதிச்சடங்கில் இலங்கை அதிகாரிகள் பங்கேற்கிறார்கள் என்றும் சமூக ஊடகங்களில் செய்தி வலம் வந்தது.
முற்றிலும் பொய்
ஆனால், சமூக ஊடகங்களில் வெளியாக பரபரப்பை கிளப்பிய இந்த செய்தி முற்றிலும் பொய்யாகும். அப்படி ஒரு விஷயமே நடக்கவில்லை. இந்த பொய்யான செய்தியைப் பார்த்த இந்திய அணியின் வீரர் அஸ்வின் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். அதனை தமது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
|
இணையத்தில் வைரல்
அதில் அவர் கூறியிருப்பதாவது: ஜெயசூர்யா குறித்த செய்தி உண்மையானதா? வாட்ஸ் அப்பில் நான் ஜெயசூர்யா குறித்த செய்தியை அறிந்தேன், ஆனால் ட்விட்டரில் இது குறித்து ஏதும் தகவல் வெளியாகவில்லை. சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது என்றார்.
ஜெயசூர்யா மறுப்பு
இதனிடையே, தம்மை பற்றி சமூக ஊடங்களில் வலம் வரும் செய்தியை ஜெயசூர்யா முற்றிலும் மறுத்திருக்கிறார். தான் சமீபத்தில் கனடாவுக்குச் செல்லவில்லை, இலங்கையில் தான் இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.
|
நலமாக இருக்கிறேன்
இது குறித்து ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: சில விஷமத்தனமான இணைய தளங்கள் பொய்யான செய்தி வெளியிட்டுள்ளன. யாரும் நம்ப வேண்டாம். நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன்.
தவிர்க்க வேண்டுகோள்
நான் இலங்கையில்தான் இருக்கிறேன். கனடாவுக்கு சமீபத்தில் செல்லவில்லை. தயவுசெய்து பொய் செய்தி பகிர்வதைத் தவிர்க்கவும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
2 ஆண்டுகள் ஐசிசி தடை
சமீபத்தில் இலங்கை கிரிக்கெட்டில் ஊழல் நடந்ததாக கூறப்படும் விவகாரம் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. அந்த விவகாரம் தொடர்பாக, விசாரணைக்கு ஜெயசூர்யா ஒத்துழைப்பது இல்லை என்றும் செய்திகள் கசிந்தன. எனவே, 2 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் தொடர்பான எந்த விவகாரங்களிலும் பங்கேற்க கூடாது என்று ஐசிசி தடை விதித்திருக்கிறது.