சுழற்பந்துவீச்சு
தற்போது அவர் பார்வை தமிழக வீரர் அஸ்வின் மீது திரும்பியுள்ளது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சின் தரம் சிறந்ததாக இருக்கிறது. ஆனால், அதே போல் தான் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா போன்ற அணியிலும் இருக்கிறது. இதனால் வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டும் சிறப்பாக பந்துவீசினால் போதாது, இந்திய அணி சுழற்பந்துவீச்சாளர்களும் சிறந்த பங்களிப்பை தர வேண்டும்.
3 இடம்
இந்திய அணி ராகுல் சாஹர், அஸ்வின், வருண் சக்ரவர்த்தியை இனி பரிசீலினை செய்யாது. அவர்களுக்கு பதில் சாஹல், ரவி பிஸ்னாய், குல்தீப், அக்சர் பட்டேல், ஜடேஜா ஆகியோருக்கு தான் இனி வாய்ப்பு கொடுக்கும். நான் விரும்புவது குல்தீப் யாதவும் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும் என்பதே. இந்தியா உலக கோப்பை தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு போக வேண்டும் என்றால் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீச வேண்டும்
யாருக்கு வாய்ப்பு
டி20 போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்கள் குறைந்தது 3 விக்கெட்டுகளையாவத எடுக்க வேண்டும். அப்போது தான் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இதனால் 3 சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களை இந்திய அணி கண்டறிய வேண்டும். அதில் சாஹலின் இடம் உறுதியாகிவிட்டது. குல்தீப் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் மற்ற 2 இடங்களை நிரப்புவார்கள் என நம்புகிறேன்.
ஹர்சல் வேண்டாம்
இருப்பினும் இந்திய ஆடுகளங்கள் போல் ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் இருக்காது. இதனால் ஆவேஷ் கான், ஹர்சல் பட்டேல், ஆர்ஷ்தீப் போன்றோரை நாம் பயன்படுத்த வேண்டும். ஆஸ்திரேலியாவில் பேட்டிற்கு பந்து நன்றாக வரும், பவுன்ஸ் ஆகும். இதனால் ஹர்சல் பட்டேலை விட ஆவேஷ் கானுக்கு வாய்ப்பு தருவது சிறந்ததாக இருக்கும்.