ஆர்சிபி டாஸ் வெற்றி
ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்று பீல்டிங்கை ஆர்சிபி தேர்வு செய்த நிலையில் முதலில் களமிறங்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் துவக்க வீரர்கள் அதிர்ச்சி கொடுத்தனர்.
நம்பிக்கையாக விளையாடிய சாம்சன்
முதல் 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி திணறியது. அணியின் ஜோஸ் பட்லர், வோரா மற்றும் மில்லர் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறிய நிலையில், நம்பிக்கையுடன் அணியின் கேப்டன சஞ்சு சாம்சன் விளையாடினார்.
சுந்தர் பௌலிங்கில் சிக்ஸ்
ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் அணி நம்பிக்கையை இழந்த நிலையில் கேப்டன் சஞ்சு சாம்சன் நம்பிக்கையூட்டும் வகையில் தனது அதிரடி ஆட்டத்தை ஆடினார். இரண்டு பவுண்டரிகளை அடித்திருந்த அவர் வாஷிங்டன் சுந்தர் பௌலிங்கில் ஒரு அதிரடி சிக்சை அடித்தார்.
21 ரன்களில் அவுட்
அதன் பிறகுதான் ஆட்டத்தில் ஒருட்விஸ்ட் வந்தது. அடுத்த பந்தை வாஷிங்டன் சுந்தர் ஸ்லோ பந்தாக வீசிய நிலையில் அதில் தூக்கி அடித்த சாம்சன், க்ளென் மாக்ஸ்வெல்லிடம் தனது கேட்ச்சை பறிகொடுத்து அவுட்டானார். இதையடுத்து 18 பந்துகளில் 21 ரன்களை எடுத்திருந்த சாம்சன் அவுட்டானார்.
தப்பித்த ராஜஸ்தான் அணி
இதையடுத்து அணியின் ஷிவம் தூபே மற்றும் ரியான் பராக் அணிக்கு கை கொடுத்தனர். அவர்கள் இருவரும் இணைந்து அடித்த அதிரடி பார்ட்னர்ஷிப்பில் 50க்கும் மேற்பட்ட ரன்கள் சேர்ந்தது. இதையடுத்து தூபேவுடன் டிவாட்டியா அதிரடி பார்ட்னர்ஷிப் அமைத்தார்.