136 ரன்கள்
பவுலர்களிடம் இருந்து விக்கெட்டுகளை எதிர்பார்க்க வேண்டும். அதுதான் ஒரு ஆட்டத்தின் வெற்றியை தீர்மானிக்கும். ஆனால்... பாக். பவுலிங் முகாமிலோ நடந்த கதையே வேறு. முதல் விக்கெட்டுக்கு இந்தியா சேர்த்த ரன்கள் 136.
சொதப்பல் பவுலிங்
டக்கரான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல், ரோகித் கூட்டணி வலுவான தொடக்கத்தை அமைத்திருக்கிறது. இந்த ஜோடியை பிரிக்கிறேன் பேர்வழி என்று பவுலிங் யூனிட்டையே சொதப்பி இருக்கிறார் கேப்டன் சர்பிராஸ்.
திரும்பவும் வாய்ப்பு
குறிப்பாக ஹசன் அலிக்கு திரும்ப, திரும்ப வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அவர் வீசிய 5 ரன்களில் விட்டுக் கொடுத்திருப்பது 45 ரன்கள். லைனில் கண்ட்ரோல் இல்லாமல் அவர் பந்துவீசியதன் விளைவு தான் இது. இந்திய வலது கை பேட்ஸ் மென் ஜோடி இந்த தவறை அழகாக பயன்படுத்தி ஸ்கோர் செய்திருக்கிறது.
ஜொலிக்காத ஹசன் அலி
ஹசன் அலியின் பந்துவீச்சு இந்திய அணியுடனான ஆட்டத்துடன் சேர்த்து ஜொலிக்கவே இல்லை. குறிப்பாக, ரோகித் மட்டையை சுழற்றி, சுழற்றி பட்டையை கிளப்ப... ஹசன் அலியின் கைகளிலேயே திரும்ப, திரும்ப பந்தை கொடுத்தார் சர்பிராஸ்.
தவறிய சர்பிராஸ்
அமீரை, கோலிக்கு பந்து வீச செய்ய வேண்டும் என்பதற்காக, கோலி களமிறங்கும்வரை அவரைப் பயன்படுத்தவே இல்லை. முன்பே பயன்படுத்தி விக்கெட் வீழ்த்துவது தான் கேப்டனின் புத்திசாலித்தனம். அதை செய்ய சர்பிராஸ் தவறிவிட்டார். மாலிக் போன்ற புதியவரையாவது குறைந்த பட்சம் களத்தில் பந்துவீச பயன்படுத்தியிருக்கலாம். ஆக மொத்தம்... சர்பிராசின் பவுலிங் கோட்டையில் பெரிய ஓட்டை...வேறென்ன சொல்ல..!!