சுவாரசியம்
உலக அளவில் எங்கு எந்த போட்டி நடந்தாலும் கிரிக்கெட்டுக்கு என்று தனி மவுசு இருக்கிறது. இந்திய அணி விளையாடும் போட்டிகள் என்றால் அது தனி ரகம். குறிப்பாக பாகிஸ்தானுடன் மோதுகிறது என்றால் அது ஏக சுவாரஸ்யம். நடப்பு உலக கோப்பை தொடரிலும் இந்த இரு அணிகளும் மோதுகின்றன.
பரபரப்பான போட்டி
இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான மோதல் அனைவரும் தெரிந்ததது. வரும் உலக கோப்பையில் இரு அணிகள் மோதும் போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து என்று கூறலாம். காரணம், அந்த அளவிற்கு போட்டியில் பரபரப்பு இருக்கும். உலக கோப்பை தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் ஒருபோதும் வீழ்த்தியதே இல்லை.
சர்பராஸ் கருத்து
இந்த முறையும் வீழ்த்த இந்தியா தயாராக உள்ளது. இந் நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:இந்த முறை உலக கோப்பையில் இந்திய அணியை கட்டாயம் வீழ்த்துவோம். சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி எப்படி வீழ்த்தியது என்பதை அனைவரக்கும் தெரிந்திருக்கும்.
தோற்கடிப்போம்
அதே போல உலக கோப்பையில் நடக்கும் போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்துவோம். நான் வெளியில் எங்கு சென்றாலும் ரசிகர்கள் தொடர்ந்து கேட்கும் ஒரே கேள்வி, இந்த உலக கோப்பையில் இந்திய அணியை வீழ்த்துவீர்கள் தானே என்பதுதான். ரசிகர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நாங்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம். அதை மனதில் கொண்டு சிறப்பாக ஆடி வெற்றி பெறுவோம் என்றார்.