இந்த காரணங்கள்
ரவி சாஸ்திரி ஏன் தேர்வானார் என்று கபில்தேவ் கூறிய காரணங்கள் இவைதான். நாங்கள் அனைவரும் தனித்தனியாக எங்களது கேள்விகளை ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் அளித்தோம். அதன்படி யாருக்கும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை.
ரகசியங்கள் உள்ளன
கடைசியில் நாங்கள் அனைவரும் கொடுத்த மதிப்பெண்களில் ரவி சாஸ்திரி அதிக மதிப்பெண் எடுத்து மீண்டும் பயிற்சியாளராக தேர்வானார். அவர் தேர்வானதுக்கு இன்னும் சில விஷயங்களும், ரகசியங்களும் இருக்கின்றன.
ரகசியம்
ஆனால் அந்த இரகசியத்தை பிசிசிஐ வெளியே சொல்லாது. அது பிசிசிஐயின் ரகசிய முடிவு என்று கபில் தேவ் கூறினார். இந்த விஷயத்தில் மற்றொரு குழு உறுப்பினர் அன்சுமன் கெய்க்வாட்டும் சில முக்கிய விஷயங்களை சொல்லி இருக்கிறார்.
வெவ்வேறு மதிப்பெண்கள்
அவர் கூறியிருப்பதாவது: 3 பேர் கொண்ட குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் அனைத்து வேட்பாளர்களுக்கும் வெவ்வேறு மதிப்பெண்கள் வழங்கினர். சாஸ்திரி முதலிடத்திலும், மைக் ஹசன் மற்றும் டாம் மூடி இரண்டாமிடத்திலும் இருந்தனர்.
நன்மை உண்டு
தற்போதைய பயிற்சியாளராக, ரவி சாஸ்திரி கிரிக்கெட்டின் அமைப்பு மற்றும் வீரர்களை நன்கு அறிந்தவர். மற்ற வேட்பாளர்களோ இந்த விஷயத்தை ஆரம்பத்தில் இருந்து தொடங்க வேண்டியிருந்தது. ஏற்கனவே கணினியை அறிந்த ஒரு நபர், வீரர்கள் மிகவும் நன்றாக, நன்றாக பேச முடியும், ஒரு நன்மை உண்டு என்றார்.