டோணியை உருவாக்கிய கங்குலி
இந்தப் பேட்டியில் டோணியின் தேர்வு குறித்து சேவாக் கூறியதாவது: அவரை அணியில் சேர்த்ததே கங்குலி தான். டோணி அணியில் விளையாட வேண்டும் என அதிக ஆர்வம் காட்டியதும் கங்குலிதான். கங்குலி இந்த வாய்ப்பை அளிக்கவில்லை எனில் டோணி இவ்வளவு உயர்ந்து இருக்க முடியாது.
டோணி வளர்ந்தது
அணியில் அறிமுகம் ஆகி சில நாட்களிலேயே டோணி நன்றாக விளையாடத் தொடங்கினார். பாகிஸ்தானுக்கு எதிராக 148, இலங்கைக்கு எதிராக 183 என வரிசையாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து அவரின் திறமையப் பார்த்த கங்குலி , டோணிக்காக அணியில் பல மாற்றங்களை செய்ய முடிவெடுத்தார் .
டோணிக்காக விட்டுக் கொடுத்தவர்
அணியின் பின்வரிசையில் ஆடிக் கொண்டிருந்த டோணியை முன் வரிசைக்கு மாற்றியதும் கங்குலிதான். டோணிக்கு நிறைய வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதால் கங்குலி தான் விளையாடிக் கொண்டிருந்த மூன்றாவது இடத்தை விட்டுக்கொடுத்தார். மூன்றாவது இடத்தில் விளையாடியதன் மூலம் மட்டுமே டோணி இன்று இந்த நிலைமையை அடைந்து இருக்கிறார்.
டோணியால் கேப்டன் பதவியை இழந்தார்
2005 ஆம் ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து கங்குலி வெளியேறிய பின் டிராவிட் கேப்டனாக பொறுப்பேற்றார். அப்போது அவர் இந்திய அணியில் செய்த மாற்றத்தை யாராலும் மறக்க முடியாது. டிராவிட்டின் கேப்டன் பதவி இளம் வீரரான டோணிக்கு வழங்கப்பட்டது. டிராவிட்டும், கங்குலியும் அப்படி தியாகத்துடன் விட்டுக் கொடுக்கவில்லை எனில் டோணியால் கேப்டன் ஆகியிருக்க முடியாது. இவ்வாறு சேவாக் கூறினார். சேவாக்கின் இந்த கருத்து சர்ச்சையாகி உள்ள்ளது.