முடிவடைந்த தடைக்காலம்
தற்போது அவருக்கு விதிக்கப்பட்ட தடைக்காலம் முடிவடைந்துள்ளது. இதையடுத்து அவரை தேசிய அணியில் சேர்க்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுதான் அதிருப்தியைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து அப்ரிடி கூறுகையில், இதெல்லாம் தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும். இது நடக்கக் கூடாது. இதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஊழல் ஒழிக்கப்பட வேண்டும்
இதுதொடர்பாக டிவி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், யாருக்கும் எதிரானவன் நான் இல்லை. ஆனால் கிரிக்கெட் வாரியம் சரியான முன்னுதாரணத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். அப்போதுதான் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் தவிர்க்கப்படும் என்றார் அப்ரிடி. இதற்கிடையே அப்ரிடி தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த உமர் குல் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது அப்ரிடிக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
உமர் குல் குறித்து அதிருப்தி
அப்ரிடி கேப்டனாக இருந்தபோது தொடர்ந்து உமர் குல்லை அணியில் சேர்த்து வந்தவர். அவரை முழுமையாக நம்பி வாய்ப்பு கொடுத்தவர். அப்படிப்பட்ட உமர் குல் இப்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஊழல் தடுப்பு விதிமுறைகளை அவர் மீறி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அப்ரிடி கூறுகையில், இது எனக்கு ஏமாற்றமளிக்கிறது. இப்படி ஒரு சர்ச்சையில் உமர் குல் சிக்கியிருப்பது வருத்தம் தருகிறது. அவர் சில திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
படிப்பறிவு தேவை
அவர் ஒரு அருமையான பேட்ஸ்மேன். ஆனால் இது மட்டும் அவருக்கு எப்போதும் கூட வராது, உதவாது. அவர் சில செயல்களைச் செய்து தன்னை சரிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அப்ரிடி. மேலும் அவர் கூறுகையில் பாகிஸ்தான் வீரர்கள் பலரும் படிக்காதவர்கள். அவர்கள் அப்படிப்பட்ட பின்னணியில் இருந்து வருபவர்கள். எனவே அவர்களுக்கு தேவையான போதனை முறைகளையும் கிரிக்கெட் வாரியம் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் ஊழலில் அவர்கள் சிக்காமல் தப்ப முடியும். தடுக்க முடியும் என்றார் அவர்.