ஷகிப்-அல் ஹசன்
இதற்கு மிகப்பெரிய சான்றாக அமைந்துள்ளது Dhaka Premier Division Twenty20 கிரிக்கெட் லீக். இத்தொடர் இப்போது வங்கதேசத்தில் நடந்து வருகிறது. இதில், மோஹம்மெதான் ஸ்போர்ட்டிங் கிளப் மற்றும் அபஹானி லிமிட்டட் அணிகளுக்கு இடையே போட்டி ஒன்று நடைபெற்றது. இதில், மோஹம்மெதான் அணியின் கேப்டன் ஷகிப்-அல் ஹசன்.
தெறித்து விழுந்த பைல்ஸ்
முதலில் பேட்டிங் செய்த ஷகிப் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. பிறகு, அபஹானி அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, வங்கதேச அணியின் தனது சக வீரரான முஷ்பிகுர் ரஹீமுக்கு அவர் பந்து வீசினார். அப்போது, ரஹீமுக்கு ஒரு எல்பிடபிள்யூ அப்பீலை ஷகிப் கேட்க, அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால், நிதானத்தை இழந்த அங்கேயே ஸ்டெம்ப்புகளை நோக்கி ஓங்கி உதைவிட பைல்ஸ்கள் தெறித்து சென்று விழுந்தன. அதோடு நிற்காமல், அம்பயருடன் கடும் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டார்.
நின்று போன ஆட்டம்
அதன் பிறகு, அபஹானி அணி 5.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்திருந்த போது, திடீரென மழை குறுக்கிட, அம்பயர் ஆட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தார். உடனே, பீல்டிங் செய்த இடத்தில் இருந்து வேக வேகமாக வந்த ஷகிப், அம்பயர் அருகில் இருந்த மூன்று ஸ்டெம்ப்புகளையும் கையோடு பிடிங்கி, தரையில் வேகமாக தூக்கி எறிந்தார்.
ரசிகர்கள் எரிச்சல்
எப்படி.. கேட்கவே நாம் தெருவில் விளையாடும் கிரிக்கெட் மேட்ச் போல் இருக்கிறதா? இப்படியொரு மோசமான செயல்பாட்டை உலகத் தரம் வாய்ந்த ஷகிப் அல் ஹசன் வெளிப்படுத்தி இருப்பது வங்கதேச ரசிகர்களையே எரிச்சல் அடைய வைத்திருக்கிறது. சமீபத்தில் தான், இலங்கைக்கு எதிரான தொடரில், விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம், இலங்கை வீரரை தள்ளிவிடச் சொல்லி, சக வங்கதேச பவுலரிடம் தெரிவித்தது சர்ச்சையான நிலையில், ஷகிப்பின் இந்த செயல்பாடு எந்த நிலையிலும் சகித்துக் கொள்ள முடியாததாக அமைந்துள்ளது.