For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஓய்வு முடிவை அறிவித்த பிரபல சென்னை அணி வீரர்... குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடிவு

சென்னை: ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி 20 கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக வாட்சன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணியில் தொடக்க வீரராக ஷேன் வாட்சன் களமிறங்கி வருகிறார். தற்போது அவரின் வயது 37. வாட்சன் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பேஷ் தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார்.

Shane Watson retires from australias big bash

சிட்னி தண்டர்ஸ் அணியில் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற பெருமையும் வாட்சனுக்கே சேரும். நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் வாட்சன் பிக் பேஷ் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ரஹானேவுக்கு கேப்டன்கிற மரியாதையே கொடுக்கலை.. என்ன நடந்தது? புட்டு புட்டு வைத்த ஆஸி. வீரர்! ரஹானேவுக்கு கேப்டன்கிற மரியாதையே கொடுக்கலை.. என்ன நடந்தது? புட்டு புட்டு வைத்த ஆஸி. வீரர்!

குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட திட்டமிட்டுள்ளதால் இந்த முடிவு என்று அவர் கூறியிருக்கிறார். ஆனால், வெளிநாடுகளில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஷேன் வாட்சன் இதுவரை 700க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 25,000க்கும் அதிகமான ரன்களும், 600 விக்கெட்களையும் வீழ்த்தி உள்ளார்.

சிஎஸ்கே அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். வாட்சன் கடைசியாக நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 53 பந்துகளில் 96 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடதக்கது.

Story first published: Friday, April 26, 2019, 19:47 [IST]
Other articles published on Apr 26, 2019
English summary
Shane Watson retires from Australia's Big Bash.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X