25வது போட்டி
ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய 25வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் மோதிய நிலையில 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி அதிரடி வெற்றி பெற்றது. இதற்கு முழு காரணமாக அந்த அணியின் துவக்க வீரர் பிரித்வி ஷா அமைந்தார்.
6 பவுண்டரிகள்
கேகேஆர் பௌலர் ஷிவம் மவி தனது ஓவரின் முதல் பந்தை வைடாக போட்ட நிலையில், அடுத்த 6 பந்துகளிலும் 6 பவுண்டரிகளை ஒரே ஓவரில் பிரித்வி ஷா அதிரடியாக அடித்தார். இதனால் மைதானமே அதகளம் பட்டது. இருவரும் இணைந்து கடந்த 2018 அன்டர் -19 உலக கோப்பை அணியில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
82 ரன்கள் குவிப்பு
பிரித்வி ஷா அதிரடியாக 41 பந்துகளில் 82 ரன்களை நேற்றைய தினம் குவித்திருந்தார். இதையடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றி எளிதாக அமைந்தது. ஷிகர் தவானும் நேற்றைய போட்டியில் 46 ரன்களை அடித்திருந்தார். இதையடுத்து 16.3 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது டெல்லி அணி.
Once the match is completed, friendship takes over. The beauty of #VIVOIPL🤗PrithviShaw | ShivamMavi23 https://t.co/GDR4bTRtlQ #DCvKKR pic.twitter.com/CW6mRYF8hs
— IndianPremierLeague (IPL) April 29, 2021
தப்பிய ஷா
போட்டி முடிந்தவுடன் பிரித்வி ஷாவிற்கு அதிரடி காத்திருந்தது. ஷிவம் மவி அவரது கழுத்தை பிடித்து வளைத்து அவரை செல்லமாக கழுத்தை நெறுக்கி பழி தீர்த்துக் கொண்டார். இதனால் ஷா வளைந்து நெளிந்து அதிலிருந்து தப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது அவர்களது சிறப்பான நட்பை வெளிப்படுத்தியது. இந்த நிகழ்வை ஐபிஎல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
ஆரோக்கியமான சூழல்
ஐபிஎல் அணிகளுக்கிடையில் மட்டுமின்றி இந்திய அணியிலும் வீரர்கள் சிறப்பான நட்பை பராமரித்து வருகின்றனர். ஒரு சிலரிடம் சில விரோதங்கள் காணப்பட்டாலும் அணி வீரர்கள் நட்புடன் காணப்படுவதை மைதானத்தில் பார்க்க முடிகிறது. இது ஆரோக்கியமான சூழல்தான்.