சுனில் நரீன் விவகாரம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கியமான வீரர் சுனில் நரீன். இவருக்கு, சந்தேகப் பந்து வீச்சு காரணமாக விளையாடுவதில் சிக்கல் நிலவுகிறது.. இதனால் அவர் மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் இடம் பெறவில்லை.
எங்களுக்கு நரீன் வேணும்
ஆனால் ஐபிஎல் தொடரில் சுனில் நரீன் விளையாட அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஷாருக் கான் கோரி வருகிறார். ஆனால் இதை பிசிசிஐ ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
சாம்பியன்ல் லீக்கில் தடை
ஏற்Kனவே 2014 சாம்பியன்ஸ் லீக் தொடரிலும், பிற போட்டிகளிலும் ஆட நரீனுக்குத் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் சமீபத்தில் அவர் பந்து வீசலாம் என்று அவருக்கு நடந்த பயோ மெக்கானிக்கல் சோதனைக்குப் பின்னர் ஐசிசி தெரிவித்துள்ளது.
பிசிசிஐ நிலைப்பாடு என்ன
ஆனால் அதன் பிறகு பிசிசியின் நிலைப்பாடு என்ன என்பது தெளிவாகவில்லை. இதனால்தான் நரீனை விளையாட அனுமதிக்காவிட்டால் போட்டித் தொடரிலிருந்து விலக கேகேஆர் முடிவு செய்துள்ளதாம். மேலும் பிசிசிஐ மீது வழக்குத் தொடரவும் ஷாருக் கான் யோசித்து வருகிறாராம்.
சென்னையில் சோதனை நடத்த உத்தரவு
இதற்கிடையே. சுனில் நரீனை சென்னையில் ஒரு சோதனைக்கு உட்படுத்த பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. அதில் அவர் பாஸ் ஆனால் ஐபிஎல் 8 தொடரில் பங்கேற்கத் தடை இல்லை என்று பிசிசிஐ கூறியுள்ளதாம்.
ஷாருக்கானுக்கு உடன்பாடில்லை
ஆனால் இந்த சோதனைக்கு ஷாருக் கான் எதிர்ப்பு தெரிவித்துள்ளாராம். நரீனை சோதனைக்குக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று அவர் கூறி வருகிறார்.
இந்த விவகாரத்தால் ஐபிஎல் தொடங்கும் முன்பே சர்ச்சை வெடித்துள்ளது.