அரைசதம்
அப்போது களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், டெஸ்ட் போட்டிக்கு ஏற்றார் போல் ஆடி ரன்களை சேர்த்தார். நியூசிலாந்து வீரர்களை வெறுப்பேற்றும் வகையில் மட்டையை போட்டும், அவ்வப்போது பவுண்டரிகளை விளாசியும் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடினார். இதன் மூலம் 109 பந்துகளில் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் விளாசினார்.
முதல் இந்தியர்
இதனையடுத்து, அறிமுக டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் சதம், 2வது இன்னிங்சில் அரைசதம் விளாசிய முதல் இந்தியர் என்ற சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் படைத்தார். இவருக்கு முன் 15 இந்தியர்கள் முதல் இன்னிங்சில் சதம் விளாசினாலும், இரண்டாவது இன்னிங்சில் ஆட்டமிழந்துவிடுவார்கள். உலக அளவில் இந்த சாதனையை மேற்கொண்ட 16வது வீரர் ஸ்ரேயாஸ் ஐயர்
பாராட்டு
ஸ்ரேயாஸ் ஐயரின் ஆட்டத்தில் இந்திய அணி தற்போது கவுரமான ஸ்கோரையும், 200 ரன்களை கடந்தும் முன்னிலை பெற்றுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயருக்கு பாராட்டு தெரிவித்த கவாஸ்வர், இதே மைதானத்தில் குண்டப்ப விஸ்வநாத், அறிமுக போட்டியில் சதம் விளாசியதாக குறிப்பிட்டார். விஸ்வநாத் சதம் விளாசினால் அந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்காது என்று குறிப்பிட்ட கவாஸ்கர், அதை போல் ஸ்ரேயாஸ் ஐயரும் மேற்கொள்வார் என நம்புவதாக தெரிவித்தார்.
Recommended Video
கவனம்
ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அந்த கையை அவர் சரியாக பயன்படுத்த முடியவில்லை.இதனால், அவரது பேட்டிங்கில் சிறிய குறை தென்படுவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். அதை அவர் சரி செய்து கொண்டால், ஸ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடித்துவிடுவார் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.