தியோதர் ட்ராபி தொடர்
இந்தியாவின் சிறந்த உள்ளூர் வீரர்கள் பங்கேற்கும் ஒருநாள் போட்டி தொடர் தான் தியோதர் ட்ராபி. இந்தியா ஏ, இந்தியா பி, இந்தியா சி என மூன்று அணிகளாக இந்த முறை இந்த தொடர் நடத்தப்பட்டது.
இறுதிப் போட்டி
இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா பி - இந்தியா சி அணிகள் மோதின. இந்தியா சி அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் களமிறங்கினார். அதன் மூலம் ஒரு சாதனை பட்டியலில் முதல் இடம் பிடித்தார்.
இளம் வயது கேப்டன்
தியோதர் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் இளம் வயது கேப்டன் என்ற பெருமையை பெற்றார் ஷுப்மன் கில். இவருடைய வயது - 20 வருடம், 57 நாட்கள் ஆகும்.
கோலி சாதனை
முன்னதாக, பத்து ஆண்டுகளுக்கு முன் விராட் கோலி நார்த் சோன் அணியின் கேப்டனாக தியோதர் ட்ராபி இறுதியில் பங்கேற்றார். அப்போது அவரது வயது - 21 வருடம், 142 நாட்கள் ஆகும். அதுவே இதுவரை சாதனையாக இருந்தது. அதை உடைத்துள்ளார் ஷுப்மன் கில்.
போட்டியில் என்ன நடந்தது?
தியோதர் ட்ராபி இறுதிப் போட்டியில் இந்தியா பி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 283 ரன்கள் குவித்து அசத்தியது. அடுத்து ஆடிய இந்தியா சி அணி சொதப்பலாக ஆடியது.
தோல்வி அடைந்தது
ஷுப்மன் கில் வெறும் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா சி அணி 50 ஓவர்களில் 232 ரன்கள் மட்டுமே எடுத்து 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.