சுப்மன் கில் இரட்டை சதம்
இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக சுப்மன் கில் இருந்தார். விக்கெட்கள் சீரான இடைவெளியில் ஒருபுறம் சரிந்து வந்த போதும் சுப்மன் கில் தூண் போல நிலைத்து நின்றார். 149 பந்துகளை சந்தித்த அவர் 19 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 208 ரன்களை விளாசி அசத்தினார். குறிப்பாக கடைசி ஓவர் வரை அவர் நின்று முடித்துக்கொடுத்தார்.
சுவாரஸ்ய சம்பவம்
இந்நிலையில் தற்போதைய இந்திய அணியில் இரட்டை சதம் அடித்துள்ள ரோகித் சர்மா, இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் ஆகிய 3 பேரிடமும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் முதல் போட்டிக்கு முன்னதாக சுப்மன் கில் என்னவெல்லாம் செய்தார் என்றும், எப்படி இரட்டை சதம் அடிக்க முடிந்தது என்றும் இஷான் கிஷான் கேள்வி எழுப்பினார்.
நாசம் செய்தார்
இதற்கு பதிலளித்த சுப்மன் கில், போட்டிக்கு முன் எனது அனைத்து செயல்பாட்டையும் இஷான் கிஷான் நாசம் செய்துவிட்டார். என்னை தூங்கக்கூட விடவில்லை. இஷானும் நானும் ஒரே அறையில் தான் தங்கியுள்ளோம். ஹெட்போனை கூட பயன்படுத்தாமல் செல்போனில் அதிக சத்தத்துடன் படம் பார்ப்பார். இதனால் நான் ஆத்திரத்தில் திட்டுவதும் உண்டு. ஆனால் அவரின் அறை என்பதால் அவருக்கு ஏற்றார் போல தான் இருக்க வேண்டும் எனக்கூறுவார். இதனால் சண்டை ஏற்படும் என சுப்மன் கில் கூறினார்.
இஷான் கிஷான் குசும்பு
இதற்கு சிரித்துக்கொண்டே பதில் அளித்த இஷான் கிஷான், நீ எனது அறையில் தூங்கியதால் தான் என்னை போன்றே இரட்டை சதத்தை அடிக்க முடிந்தது. எனது அறையின் சக்தி அப்படி என்பது போல கூற, அனைவரும் சிரித்தனர். உண்மையில் சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷான் நெருங்கிய நண்பர்கள் ஆகும். இவர்கள் இவரும் நீண்ட நாட்களாக ஒன்றாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.