அதிரடி
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி பிப்ரவரி 22ம் தேதி நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி தடுமாறிய போது ஒற்றை ஆளாக போராடிய டேவான் கான்வாய் 59 பந்துகளில் 99* ரன்கள் அடித்து அனைவரையும் வியக்கவைத்தார்.
பாராட்டு
டேவான் கான்வாயின் ஆட்டத்தை கண்ட ரசிகர்கள் முன்னாள் வீரர்கள், வீரர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வந்தனர். அந்த வகையில் இந்திய வீரர் அஷ்வின் ட்விட்டரில் அற்புதமான விளையாட்டு என புகழ்ந்திருந்தார்.
ஏமாற்றம்
ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய டேவான் கான்வாய் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ஏலம் விடப்பட்டார். ஆனால் அவர் மீது ஒரு அணி கூட ஆர்வம் காட்டவில்லை. மாறாக யாரும் எதிர்பார்க்காத வீரர்களையே அதிகளவில் விலை கொடுத்து வாங்கி வந்தனர்.
சர்ச்சை
அஸ்வினின் பாராட்டு ட்வீட்டிற்கு தற்போது ரிப்ளை செய்துள்ள நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டௌல், ஐபிஎல்-ல் ஆஸ்திரேலியாவின் 2ம் தர வீரர்களுக்கு தரும் முக்கியத்துவம் கூட நியூசிலாந்து வீரர்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஐபிஎல் ஏலத்தில் டேவான் கான்வாய்யின் திறமை மதிப்பில்லாமல் போனது என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.