இறுதி டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி தற்போது பிரிஸ்பேனில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின்மூலம் சர்வதேச அளவிலான தனது டெஸ்ட் பயணத்தை துவங்கியுள்ள முகமது சிராஜ் தன்னுடைய பௌலிங் மூலம் அனைவரையும் மிரட்டி வருகிறார்.
5 விக்கெட்டுகள்
குறிப்பாக இந்த டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்திருந்த சிராஜ், தற்போது இரண்டாவது இன்னிங்சில் 5 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி அதிகமான ரன்களை குவிக்க முடியாமல் திணறியது.
வெற்றி வாய்ப்பு அதிகரிப்பு
முக்கியமாக ஆஸ்திரேலிய ரன் மெஷின் லாபுஸ்சாக்னே, ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹாசல்வுட் ஆகிய விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளார். 75 ஓவர்களிலேயே ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 2வது இன்னிங்சை முடித்துள்ளதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.
5 விக்கெட்டுகள்
19.5 ஓவர்களை போட்டு, 73 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் சிராஜ். மேலும் மெய்டன் ஓவர்கள் டாட் பால்கள் என ஆஸ்திரேலிய அணியை திணறடித்துள்ளார். பும்ரா உள்ளிட்ட வீரர்களிடம் காணப்படும் தலைமை பண்புகள் அனைத்தும் முதல் இரண்டு போட்டிகளிலேயே அவர் வெளிப்படுததியுள்ளார்.