எப்படி
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் சிராஜ் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். இன்றைய நாள் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணி ஒப்பனர்கள் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். வார்னர் அதிரடியாக ஆடி 48 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் மார்கஸ் ஹாரிஸும் 38 ரன்கள் எடுத்தார்.
சிராஜ்
இவர்களின் அதிரடி ஆட்டத்தை பார்த்த பின் வலுவான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமையும் என்றுதான் கருதப்பட்டது. ஆனால் வார்னர் விக்கெட்டை வாஷிங்க்டன் சுந்தர் எடுத்த பின் வரிசையாக ஆஸ்திரேலிய அணி விக்கெட்டை இழந்தது. முக்கியமாக சிராஜ் வீசிய 31வது ஓவரில் அடுத்தடுத்து விக்கெட் விழுந்தது.
பவுலிங்
சிராஜ் வீசிய 31வது ஓவரின் 3வது பந்திலும் கடைசி பந்திலும் அடுத்தடுத்து விக்கெட் விழுந்தது. ஆஸ்திரேலியாவின் வலுவான மார்னஸ் 25 ரன்களுக்கும், மேத்யூ வேட் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்கள். இது ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய சரிவை கொடுத்தது.
பவுலர்கள்
இந்திய அணியில் மூத்த பவுலர்கள் இல்லாத நிலையில் சிராஜ்தான் அணியின் பவுலிங் படையை வழி நடத்தி வருகிறார். முதல் இன்னிங்சில் இவர் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் அடுத்தடுத்து 2 விக்கெட் எடுத்து அசத்தி உள்ளார்.
விக்கெட்
இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணியில் சிராஜ் முக்கியமான இடம் பிடிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஷமி அடிக்கடி காயம் அடைவதால் விரைவில் இவர் டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பை இழக்கலாம். இதனால் ஷமியின் இடத்தை சிராஜ் விரைவில் பிடிக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.