அதிரடி ஆட்டம்
2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீசியது. இதனையடுத்து, ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். கேஎல் ராகுல் பவுண்டரி களை விரட்டி ரன்களை குவித்தார். இதே போன்று ரோகித் சர்மாவும் தனது 400வது டி20 போட்டியில் பட்டையை கிளப்பினார்.
மைதானத்தில் பாம்பு
இந்திய அணி பவர்பிளே முடிவில் 57 ரன்கள் சேர்த்தது. அப்போது ஆட்டத்தின் 7வது ஓவர் முடிவில் கேஎல் ராகுல் ஏதோ, மைதானத்தில் நகர்ந்து வந்ததை பார்த்தார். உடனே அது பாம்பு என்பதை அறிந்த ராகுல், உடனடியாக தென்னாப்பிரிக்க வீரர்களை எச்சரித்து, அங்கிருந்து நகர சொன்னார்.
ஊழியர்கள் விரைந்தனர்
உடனடியாக நடுவர்கள், மைதான ஊழியர்களை வர வழைத்தனர். பாம்பை கண்டால் படையே நகரும் என்று சொல்வார்கள். அதே போல், பாம்பை பிடிக்க ஒரே படையே மைதானத்திற்குள் வந்தது. ஆனால் உடனடியாக பாம்பை பிடித்த ஊழியர்கள் அதனை ஒரு பிளாஸ்டிக் வாலியில் போட்டு மைதானத்தை விட்டு அப்புறப்படுத்தினர்.
பாதுகாப்பு குறைபாடு
தனது வாழ்க்கையில் கிரிக்கெட் மைதானத்திற்குள் பாம்பு வந்து பார்த்தது இல்லை என்று தென்னாப்பிரிக்க வாண்னையாளர் பமிங் பங்வா கூறினார்.இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஹர்சா போக்லே, பாம்பை இப்போது தான் களத்தில் பார்க்கிறேன். ஆனால், ஏற்கனவே ஒரு பாம்பு வந்ததாக தெரிவித்துள்ளார். பாம்பு மைதானத்தில் இருப்பதால் வீரர்களின் பாதுகாப்பும், ரசிகர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி இருக்கிறது. பாம்பை பார்த்த ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.