பேட்டிங் குறித்து கேள்வி
இந்நிலையில் கோலியின் பேட்டிங் குறித்தே தற்போது கேள்வி எழுப்பி இருக்கிறார் ஒரு முன்னாள் வீரர். அவர் வேறும் யாருமல்ல... விவிஎஸ் லக்ஷ்மண் தான். அவர் கூறியிருப்பதாவது:
சுழற்பந்துவீச்சு
கோலியின் பேட்டிங்கை பார்க்கும் போது சில கேள்விகள் எழுகின்றன. அதிலும் அவர் ஸ்பின் பவுலிங்கில் திணறுகிறார். குறிப்பாக.. கூக்லி பந்துவீச்சை எதிர்கொள்வதில் பலவீனமாக இருக்கிறார்.
திணறும் கோலி
முஜீப், சாம்பா, மர்காண்டே ஆகியோர் பந்துவீச்சில் கூட கோலி ஆட்டமிழந்து இருக்கிறார். ஆக விராட் கோலி ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பந்தை எதிர்கொள்ள திணறுகிறார். அதை திருத்திக் கொண்டு தோல்வியில் இருந்து மீண்டு வரவேண்டும்.
தோல்வி மேல் தோல்வி
இதுவரை பெங்களூர் அணி தாம் விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியை கண்டுள்ளது. அணியின் வெற்றி, தோல்வி என அனைத்துக்கும் கேப்டன் தான் பொறுப்பு. எனவே... ,இனி வரும் போட்டிகள் கோலிக்கு சவாலானது என்று கூறினார்.