For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஓ மை கடவுளே.. இந்திய அணியில் மேலும் சிலருக்கு காயம் ஏற்பட வாய்ப்பு.. பதற்றத்தில் இருக்கும் பிசிசிஐ!!

மும்பை: இந்திய அணியில் மேலும் 3 வீரர்களுக்கு காயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் தான் தற்போது பெரும் குழப்பங்கள் நீடித்து வருகின்றன.

கடைசி நேர ட்விஸ்ட்.. டி20 உலகக்கோப்பை அணியில் உம்ரான் மாலிக்.. பிசிசிஐ போட்ட மெகா ப்ளான் - காரணம் கடைசி நேர ட்விஸ்ட்.. டி20 உலகக்கோப்பை அணியில் உம்ரான் மாலிக்.. பிசிசிஐ போட்ட மெகா ப்ளான் - காரணம்

இந்தியாவுக்கு பின்னடைவு

இந்தியாவுக்கு பின்னடைவு

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும், டி20 உலகக்கோப்பையில் இருந்து விலகுவதாகவும் தகவல்கள் வெளியாகின. பின்னர் சாதாரண முதுகு வலி தான் என்றும், ஒரு சில போட்டிகளை தவறவிடுவார் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கான மாற்று வீரரை தேர்வு செய்யும் பணிகள் தீவீரமடைந்துள்ளன.

தொடக்கமே பிரச்சினை

தொடக்கமே பிரச்சினை

இந்நிலையில் இந்திய அணியில் மேலும் 3 வீரர்களுக்கு காயம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அதில் முதலில் இருப்பதே கேப்டன் ரோகித் சர்மா தான். 35 வயதாகும் ரோகித்திற்கு அதிக உடல் எடையால் அடிக்கடி தசைப்பிடிப்பு பிரச்சினை ஏற்படும். சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸுடனான தொடரில் கூட காயத்தினால் இன்னிங்ஸின் பாதியிலேயே வெளியேறினார். அடுத்த போட்டியில் விளையாடவில்லை. எனவே அவருக்கு எப்போது வேண்டுமானாலும் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் பிசிசிஐ மருத்துவக்குழு அதிக கண்காணிப்புடன் இருக்கிறார்கள்.

2வது வீரர் யார்?

2வது வீரர் யார்?

இந்த பட்டியலில் 2வதாக இருப்பது முதன்மை பவுலர் புவனேஷ்வர் குமார் தான். புவனேஷ்வர் குமாருக்கு கடந்த காலங்களில் நிறைய காயங்கள் ஏற்பட்டிருப்பதால், சற்று கூடுதல் போட்டிகளில் விளையாடினால் கூட இந்த பட்டியலில் 2வதாக இருப்பது முதன்மை பவுலர் புவனேஷ்வர் குமார் தான். புவனேஷ்வர் குமாருக்கு கடந்த காலங்களில் நிறைய காயங்கள் ஏற்பட்டிருப்பதால், சற்று கூடுதல் போட்டிகளில் விளையாடினால் கூட தசைப்பிடிப்பு, முதுகுவலி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதனால் தான் தென்னாப்பிரிக்க தொடரில் அவருக்கு ஓய்வு கொடுத்துள்ளனர். எனவே அவரின் பணிச்சுமையை சரியாக கையாள வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. தசைப்பிடிப்பு, முதுகுவலி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதனால் தான் தென்னாப்பிரிக்க தொடரில் அவருக்கு ஓய்வு கொடுத்துள்ளனர். எனவே அவரின் பனிச்சுமையை சரியாக கையாள வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது.

ஹர்ஷல்

ஹர்ஷல்

இந்தியாவின் மற்றொரு பிரச்சினை ஹர்ஷல் பட்டேல் தான். டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டாக உள்ள இவர், நீண்ட ஓய்வுக்கு பின் தற்போது தான் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். எனினும் பும்ராவை அவசரப்படுத்தியதை போன்றே ஹர்ஷலையும் பிசிசிஐ அவசரப்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே ஒருவேளை சரியான ஓய்வில்லாமல் ஹர்ஷல் களமிறங்கினால், பழைய காய பாதிப்பு மீண்டும் தொந்தரவு கொடுக்கலாம்.

Story first published: Saturday, October 1, 2022, 17:04 [IST]
Other articles published on Oct 1, 2022
English summary
Team India Players who are in under injury concern ahead of t20 world cup 2022
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X