4 நாடுகள் கிரிக்கெட் தொடர்
பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்ற பின்பு தனது 4 நாடுகள் கிரிக்கெட் தொடர் குறித்த யோசனையை வெளியிட்டார். இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மற்றொரு நாடு விளையாடவுள்ள இந்த தொடர் குறித்து மேலும் ஆலோசனை மேற்கொள்ள தற்போது அவர் லண்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சங்கம் மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர்.
சவுரவ் கங்குலி செல்பி
இந்நிலையில் விமானத்தில் இருந்தபடி செல்பியை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, மற்றொரு இலக்கிற்கான பயணம் என்று கேப்ஷனையும் வெளியிட்டுள்ளார். தன்னுடைய 4 நாடுகள் தொடருக்கு ஐசிசியின் ஒப்புதலை கோரியுள்ள நிலையில், அவரது இந்த பயணம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
வம்பிழுத்த மகள் சனா
இந்நிலையில் இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள சவுரவ் கங்குலியின் மகள் சனா கங்குலி, அவரை வம்பிழுக்கும்வகையில், நான் இல்லாமல் மகிழ்ச்சியாக நீங்கள் சென்றுள்ள பயணம் என்று கமெண்ட்டை பதிவு செய்துள்ளார். எப்போதும் தன்னுடைய தந்தையின் பதிவுகளுக்கு அவரை வம்பிழுத்து கமெண்ட்டுகளை போடும் சனா, தற்போதும் அந்த வேலையை மிகச் சிறப்பாக செய்துள்ளார்.
கங்குலி பதிவிற்கு சனா கமெண்ட்
கடந்த டிசம்பர் மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்வது குறித்து சவுரவ் கங்குலி பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த சனா கங்குலி, வேலை இல்லாதபோது 12 மணிவரை யார் தூங்குவது என்று கேள்வி எழுப்பி, இன்னும் அதிக தூரங்கள் செல்லவேண்டும் அப்பா என்றும் தெரிவித்திருந்தார். இதனிடையே, இவர்கள் இருவரது இந்த வாடிக்கையான வம்பிழுக்கும் பதிவுகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.