துபாய் : ஐபிஎல் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வரும் நிலையில், அவற்றை மேற்பார்வையிடும் வகையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி துபாய்க்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் வரும் 19ம் தேதி துவங்கி நவம்பர் 10ம் தேதி வரை 53 நாட்களுக்கு துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபியில் நடத்தப்பட உள்ளன.
முதல் போட்டி சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள நிலையில், போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
ரிடையர்ட் ஆனாலும் தோனியோட திறமை குறையாது... ஐபிஎல்லுல 100% திறமையை தருவாரு
ஐபிஎல் போட்டிகள் வரும் 19ம் தேதி துவங்கி நவம்பர் 10ம் தேதிவரையில் 53 நாட்களுக்கு நடைபெறவுள்ளன. இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக யூஏஇயின் ஷார்ஜா, துபாய் மற்றும் அபுதாபியில் நடத்தப்பட உள்ள இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக 8 அணிகளை சேர்ந்த வீரர்களும் தீவிரமாக பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் போட்டிகளுக்கான ஏற்பாடுகள், பயோ பபள் முறை உள்ளிட்டவற்றை மேற்பார்வையிடும்வகையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி துபாய்க்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதனிடையே 6 மாதங்களுக்கு பிறகு தான் விமானத்தில் பயணம் மேற்கொள்வதாக தனது பயணத்திற்கு முன்பு கங்குலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.