For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இருக்கு.. அவருக்கு செம ஆப்பு இருக்கு.. 2016இல் வெடித்த மோதல்.. பழசை மறக்காத தலைவர் கங்குலி!

Recommended Video

Sourav Ganguly press meet

மும்பை : 2016இல் ரவி சாஸ்திரி, அப்போதைய கிரிக்கெட் ஆலோசனை குழு உறுப்பினர் கங்குலிக்கு எதிராக பேசி இருந்தார்.

அதற்கு அப்போது கங்குலியும் கடும் எதிர்வினை ஆற்றினார். இருவரும் அடுத்த சில பேட்டிகளில் மோதிக் கொண்டார்கள்.

அதை கங்குலி இன்னும் மறக்கவில்லை என்பது ஒரு பேட்டியில் அளித்த பதிலில் இருந்தே தெரிகிறது.

மரண கலாய்

மரண கலாய்

தற்போது ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் நிலையில், கங்குலி பிசிசிஐ தலைவராக பதவியில் அமர இருக்கிறார். இந்த நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய கங்குலி, ரவி சாஸ்திரி குறித்த கேள்வி ஒன்றிற்கு "மரண கலாய்" என் கூறும் அளவிற்கு பதில் அளித்து தெறிக்க விட்டுள்ளார்.

அனில் கும்ப்ளே தேர்வு

அனில் கும்ப்ளே தேர்வு

2016ஆம் ஆண்டு நடந்த இந்திய அணி தலைமை பயிற்சியாளர் தேர்வை நடத்திய அப்போதைய கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் சச்சின், லக்ஷ்மன், கங்குலி மூவரும், அனில் கும்ப்ளேவை பயிற்சியாளராக நியமித்தனர்.

ரவி சாஸ்திரி கோபம்

ரவி சாஸ்திரி கோபம்

அப்போது கேப்டன் விராட் கோலிக்கு நெருக்கமானவராக இருக்கும் ரவி சாஸ்திரியும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு பதவி கிடைக்கவில்லை என்றதும் கோபம் அடைந்தார். அதற்கு காரணம், கங்குலி தன் என்பது போல அவர் கூறினார்.

பாங்காக் சுற்றுலா

பாங்காக் சுற்றுலா

ரவி சாஸ்திரி, அப்போது அளித்த பேட்டிகளில் கங்குலி தன்னை அளித்த நேர்முகத் தேர்வில் பங்கேற்கவே இல்லை என்றார். ஆனால், ரவி சாஸ்திரி அப்போது பாங்காக் சுற்றுலா சென்று இருந்தார். அதனால், வீடியோ கான்பரன்ஸ் முறையில் தான் நேர்முகத் தேர்வை சந்தித்தார்.

கங்குலி பதிலடி

கங்குலி பதிலடி

அதை குறிப்பிட்ட கங்குலி. அவர் நேரில் வந்திருக்க வேண்டும் என பதிலடி கொடுத்தார். அதன் பின் இருவரும் நல்ல தொடர்பில் இல்லை. தாங்கள் அளிக்கும் பேட்டிகளில் இருவரும் ஒருவரை ஒருவர் நையாண்டி செய்து தான் பேசி வந்தனர்.

அணிக்குள் நுழைந்த ரவி சாஸ்திரி

அணிக்குள் நுழைந்த ரவி சாஸ்திரி

அதன் பின், அனில் கும்ப்ளே ராஜினாமா செய்ய வைக்கப்பட்டு, ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். கங்குலியால் அப்போது எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

அணிக்குள் நுழைந்த ரவி சாஸ்திரி

அணிக்குள் நுழைந்த ரவி சாஸ்திரி

அதன் பின், அனில் கும்ப்ளே ராஜினாமா செய்ய வைக்கப்பட்டு, ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். கங்குலியால் அப்போது எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

தலைவர் ஆகும் கங்குலி

தலைவர் ஆகும் கங்குலி

2 ஆண்டுகள் கழிந்த நிலையில், தற்போது கங்குலி பிசிசிஐ அமைப்பின் தலைவர் பதவியில் அமர இருக்கிறார். தற்போது கங்குலி இந்திய அணியில் எந்த மாற்றம் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கங்குலி அளித்த தெறி பதில்

கங்குலி அளித்த தெறி பதில்

இந்த நிலையில், தலைவர் பதவி உறுதி என்ற நிலையில் ரவி சாஸ்திரியிடம் பேசினீர்களா? என ஒரு நிருபர் கேட்ட சாதாரண கேள்விக்கு, "ஏன்.. ரவி சாஸ்திரி இப்ப என்ன பண்ணாரு?" என கேலியாக பதில் அளித்து, சிரித்து இருக்கிறார் கங்குலி. அவர் இன்னும் பழைய பகையை மறக்கவில்லை என்பதற்கு இது ஒன்றே சாட்சி.

ரசிகர்கள் குஷி

ரசிகர்கள் குஷி

மறுபுறம், ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக விரும்பாத பெரும்பாலான இந்திய ரசிகர்கள் கங்குலி தலைவர் பதவியில் அமர்ந்ததும் குஷி ஆகி உள்ளனர். எப்படியும் கங்குலி அவரை நீக்குவார் என சிலர் கூறி வருகின்றனர்.

நடவடிக்கை எடுப்பாரா?

நடவடிக்கை எடுப்பாரா?

கங்குலி, ரவி சாஸ்திரி மீது நடவடிக்கை எடுப்பாரா? என்று கேட்டால், இப்போதைக்கு அது சாத்தியமில்லை என்று தான் கூற வேண்டும். காரணம், இந்திய அணி மீதோ, ரவி சாஸ்திரி மீதோ பெரிய விமர்சனங்கள் ஏதும் இல்லை. ஆனால், கங்குலி தலைவர் ஆக இருக்கப் போகும் 10 மாதங்களில் ஏதேனும், விமர்சனம் எழுந்தால் ரவி சாஸ்திரிக்கு சிக்கல் தான்.

Story first published: Friday, October 18, 2019, 13:56 [IST]
Other articles published on Oct 18, 2019
English summary
Sourav Ganguly still remembers 2016 incident with Ravi Shastri. Fans feel that Ganguly will remove Ravi Shastri from Head Coach position
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X