கொல்கத்தா : பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு இதயத்தில் 3 அடைப்புகள் இருந்ததாகவும் ஒரு பிளாக்கில் ஸ்டண்ட் பொருத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாகவும் நேற்றிரவு அவர் நிம்மதியாக உறங்கியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிசிசிஐ தலைவர் மற்றும் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இதயத்தில் 3 அடைப்புகள் இருந்ததாகவும் ஒரு பிளாக்கில் ஸ்டண்ட் பொருத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருடைய உடல்நிலை நிலையாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் நேற்றிரவு அவர் நிம்மதியாக உறங்கியதாகவும் மருத்துவர்கள் கூறினர். தொடர்ந்து அவரது நிலை கண்காணிப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.