165 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
இங்கிலாந்து அணியில் ஆலிவ் போப் மட்டும் பொறுப்புடன் விளையாடி 73 ரன்கள் சேர்க்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இதில் தென் ஆப்பிரிக்கா வீரர் ரபாடா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.இதனை அடுத்து தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் களம் இறங்கியது கேப்டன் டீன் எல்கார் 47 ரன்களில் வெளியேற சாரல் பொறுப்புடன் விளையாடி 73 ரன்கள் சேர்த்தார்.
326 ரன்கள்
அதன் பின்னர் கீகன் பீட்டர்சன் ,எய்டன் மார்க்ரம், வெண்டர் டுசன் ஆகியோர் தொடக்கங்களை கொடுத்தாலும் அதனை பெரிய ஸ்கோர் ஆக மாற்றாமல் அடுத்தடுத்து வெளியேறினர்.இறுதியில் யான்சன் 48 நாட்களும், கேசவ் மகாராஜ் 41 ரன்களும் எடுக்க தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
161 ரன்கள் முன்னிலை
161 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது. தொடக்க வீரர் அலெக்ஸ் லீஸ் 35 ரன்களும், ஜாக் கிராலி 13 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதன் பிறகு வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் நோக்கி அணிவகுப்பு நடத்தினர். போப் ஐந்து ரன்களிலும் ஜோ ரூட் 6 ன்களிலும் ஆட்டமிழந்ததனர்.
இன்னிங்ஸ் தோல்வி
குறிப்பாக தென்னாப்பிரிக்கா வீரர் நோக்கியா வீசிய 10 பந்துகளில் மூன்று விக்கெட்டுகள் விழுந்தது.இதனால் இங்கிலாந்த அணி 31 ஓவர் முடிவில் 112 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.நோக்கியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்த அணி திணறியது. அந்த அணி 2வது இன்னிங்சில் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.