சீனியர்கள் இல்லை
இதனால் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சும் ஒரு குறையாக பார்க்கப்படுகிறது. பும்ரா திரும்பியும், ஆஸ்திரேலிய அணி பவர்பிளேவில் பேய் அடி அடித்து ரன்களை குவித்தது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டது.
தீபக் சாஹர்
இந்த நிலையில், பும்ராவும் இல்லாத நிலையில், ஆர்ஸ்தீப் சிங் மற்றும் சிஎஸ்கே வீரர் தீபக் சாஹரும் புது பந்தில் ஓவர்களை இரு முனையிலும் வீசினர். தீபக் சாஹர் வழக்கம் போல் பந்துகளை அவுட் ஸ்விங் செய்து தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு நெருக்கடி அளித்தார். இந்த நிலையில் கடைசி பந்தில் ஒரு இன் ஸ்விங் வீச, அது பெவுமா ஸ்டம்பை பதம் பார்த்தது.
3 விக்கெட்
இதனையடுத்து ஆர்ஸ்தீப் சிங் 2வது ஓவரை வீசினார். 2வது பந்தில் குயின்டன் டி காக் பந்தை அடிக்க முயன்ற போது அது பேட்டில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. இதனையடுத்து ஆர்ஸ்தீப் சிங் அனல் பறக்க பந்துகளை வீச அதனை எதிர்கொள்ள முடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் திணறினர். 2வது ஓவரின் 5வது பந்தில் ரூசோவ் ரிஷப் பண்டிடம் கேட்ச் ஆனார்.
தடுமாறும் தென்னாப்பிரிக்கா
இதே போன்று கடைசி பந்தில் அதிரடி டேவிட் மில்லர் கிளின் போல்ட் ஆனார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 9 ரன்கள் சேர்ப்பதற்குள் அணியின் பாதி பேர் பெவிலியனுக்கு சென்றுவிட்டனர். முன்னணி பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லாத நிலையில், தென்னாப்பிரிக்க அணி அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. தற்போது ஹர்சல் பட்டேல் தென்னாப்பிரிக்க அணியின் 6வது விக்கெட்டை கைப்பற்றினார்.