டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோணிக்கு நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா வழங்கப்படவுள்ளது. இந்த ஆண்டுக்கான மிகச் சிறந்த விளையாட்டு வீரராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெண்டுல்கரை அடுத்து இந்த விருதைப் பெறும் இரண்டாவது கிரிக்கெட் வீரர் டோணி ஆவார். இந்த விருது பெறுவோர் பட்டியலில் பல தடகள வீரர்களும் இடம் பெற்றிருந்தனர். இறுதியின் டோணியின் பெயரை இதற்காக அமைக்கப்பட்ட மில்கா சிங் தலைமையிலான கமிட்டி இறுதி செய்தது.