ஆல்ரவுண்டர் மோரிஸ்
மோரிஸ் ஒரு பக்கா ஆல்ரவுண்டர் ஆவார். தென் ஆப்பிரிக்க அணியின் அசைக்க முடியாத வீரராக இருப்பவர்.
37 வீரர்களில் ஒருவர்
மொத்தம் 108 வீரர்கள் ஏலம் விடப்பட்டதில் 37 பேர் மட்டுமே விலை போயினர். அதில் மோரிஸும் ஒருவர்.
ஐபேடில் நேரடியாக பார்த்தார்
ஐபிஎல் ஏலத்தை மோரிஸ் தனது ஐபாட் மூலம் நேரடியாகப் பார்த்து ரசித்தாராம். அதில் புழங்கிய பணமும், விலை போன வீரர்களை ஏலம் எடுத்த தொகையும் அவரை அதிரவும், ஆச்சரியப்படவும் வைத்து விட்டதாம்.
நம்பவே முடியலை...
எனது வாழ்க்கையில் இப்படி ஒரு பணத்தை நான் பார்த்ததே இல்லை. அந்த அளவுக்கு ஐபிஎல்லில் பணம் புழங்குகிறது. இது ஆச்சரியமாக இருக்கிறது. என்ன நடக்கிறது என்றே எனக்கும், என்னுடன் ஏலத்தைப் பார்த்துக் கொண்டிருந்த நீல் மெக்கன்சிக்கும் புரியவே இல்லை...
எப்படிச் செலவழிப்பது என்றும் தெரியவில்லை...
இவ்வளவு பணத்தை வைத்து நான் எப்படிச் செலவழிப்பேன் என்றும் தெரியவில்லை. ரொம்ப குழப்பமாக இருக்கிறது.எங்க அப்பா அம்மாவிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து விடுவேன். கொஞ்சத்தை செலவழித்து விடுவேன்... மிச்சத்தை என்ன செய்வது என்று தெரியவில்லை என்று கூறி சிரிக்கிறார் மோரிஸ்.
டுவென்டி 20 கிரிக்கெட்டில் பந்து வீச்சுப் புலி
மோரிஸ், தென் ஆப்பிரிக்க டுவென்டி 20 போட்டிகளில் கலக்கி வருபவர். குறிப்பாக பந்து வீச்சில் கில்லாடியாக இருக்கிறார். உள்ளூர் போட்டிகளில் அவர்தான் அதிக விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்தான், மோரிஸின் திறமையை அறிந்து அவரை குறி வைத்து தூக்கியுள்ளார்.