போட்டி தேவை
எப்போதுமே கிரிக்கெட்டில் போ்ட்டி நிலவுவது ஆரோக்கியமானதுதான். தற்போது அப்படிப்பட்ட ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்களுக்கு இடம் கிடைக்கிறது.
ஷேவாக் மீண்டும் வரலாம்
தற்போது விளையாடி வரும் வீரர்களில் யாராவது பொருத்தமற்றவர்களாக மாறினால் அப்போது கம்பீரோ, ஷேவாக்கோ, ஏன் ஜாகிர் கானோ கூட மீண்டும் விளையாட வரலாம்.
அனுபவத்தைப் புறக்கணித்து விட முடியாது
கடினமான டூர்களில் அனுபவசாலியான வீரர்களும் தேவை. எனவே எந்த வீரரையும் நாம் முடிவு கட்டி விட முடியாது.
ஷேவாக், கம்பீர் விளையாட வேண்டும்
ஷேவாக்கும், கம்பீரும் தொடர்ந்து உள்ளூர்ப் போட்டிகளில் விளையாட வேண்டும். நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுதான் நல்லது என்றார் மோரே