இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் இடம் பெற எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சென்னையில் நடைபெறும் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்ற மாட்டார்கள் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த இலங்கை வீரர்கள் இந்த சீசனில் விளையாடவில்லை. ஆனால் சன் குழும நிர்வாகம் வாங்கியுள்ள சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இலங்கை வீரர் சங்ககரா கேப்டனாக இருக்கிறார்.
இந்த நிலையில் சங்ககரா பதவியில் இருந்து விலக வலியுறுத்தியும், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹைதராபாத்தில் இன்று திடீர் போராட்டம் நடைபெற்றது ஐதராபாத்தில் ஐ.பி.எல். வீரர்கள் தங்கி இருக்கும் ஓட்டல் முன் இந்த போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து உடனடியாக போலீசார் விரைந்து வந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டது எந்த அமைப்பு என்ற விபரம் தெரியவில்லை. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.