மோசமான வானிலை
அப்போது, மோசமான வானிலை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. மைதானம் முழுவதும் மூடப்பட்டது. வானிலை நிலவரம் தொடர்ந்து அதே நிலையில் நீடித்ததால், முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
டெய்லர் 86
டெய்லர் 86 ரன்கள், சாண்ட்னர் 8 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர். 2வது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த டெய்லர் நிலைக்கவில்லை. 86 ரன்களில் வெளியேறினார்.
249 ரன்களில் சுருண்டது
அவர் தொடர்ந்து வைத்து விக்கெட் வீழ்ச்சி நிற்கவில்லை. சாண்டனர் 13 ரன்களிலும், சவுத்தி 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். போல்டு 18, அஜாஸ் படேல் டக் அவுட்டாகி வெளியேறினர். நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 249 ரன்களுக்கு சுருண்டது.
சொதப்பல் துவக்கம்
தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடர்ந்த இலங்கைக்கு, கருணரத்னே 39 ரன்கள் எடுத்தும், திரிமன்னே 10 ரன்கள் எடுத்தும் சுமாரான துவக்கம் அளித்தனர். பின் வந்த மெண்டிஸ் 53 ரன்களும், மாத்யூஸ் 50 ரன்கள் எடுத்தனர்.
பின்தங்கிய நிலை
தொடர்ந்து வந்த குசல் பெரேரா, தனஞ்சயா வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். 2வது நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்து 22 ரன்கள் பின் தங்கி இருக்கிறது.