கூட்டத்துக்கு ஏற்பாடு
இது தொடர்பாக, அனைத்து வீரர்களையும் சமாதானப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, அந்நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் பெர்னாண்டோ அறிவுறுத்தி இருந்தார். அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதற்கான கூட்டமும் நடத்தப்பட்டது.
பெரும் பின்னடைவு
அதனால் திட்டமிட்டபடி இலங்கை அணி பாகிஸ்தான் சென்று விளையாடுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அணி வீரர்களின் இந்த நடவடிக்கை அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கும், பாகிஸ்தானுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.
பலர் ஆதரவு
இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என்று எடுத்த முடிவு தவறல்ல என்று முன்னாள் ஜாம்பவான்களும், கிரிக்கெட் வல்லுநர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதற்கு அவர்கள் 2009ம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவத்தை நினைவுபடுத்துகின்றனர்.
லாகூர் தாக்குதல்
2009ம் ஆண்டு, லாகூரில் இலங்கை அணி மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் பல இலங்கை வீரர்கள் காயமடைந்தனர். இலங்கை கிரிக்கெட் அணி 2து கிரிக்கெட் டெஸ்டின் 3வது நாளுக்காக கடாபி மைதானத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, தீவிரவாதிகள் குழு பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது.
பாதுகாப்பு எங்கே?
குறைந்தது 6 கிரிக்கெட் வீரர்கள் காயம் அடைந்தனர். 7 பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் இந்த வீரர்கள் விமானத்தில் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து, பாதுகாப்பு கருதி சர்வதேச கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.