முடிந்தது தடை
அதனை தொடர்ந்து, அவர் ஆஸ்திரேலிய உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று விளையாடினார். இந்நிலையில், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரின் தடைக்காலம் ஓராண்டு இன்றுடன் முடிந்தது.
ஐபிஎல் போட்டி
இருவரும் தற்போது, ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் வார்னரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஸ்மித்தும் விளையாடுகின்றனர்.
மோசமான தோல்வி
ஸ்மித், வார்னர் இல்லாதபோது, ஆஸ்திரேலியா பல மோசமான தோல்விகளை சந்தித்தது. அவர்களின் தடைக்காலம் முடிந்ததை அடுத்து, வரும் உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இருவரும் இடம்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீரர்கள் எதிர்ப்பு
ஆஸ்திரேலிய மூத்த வீரர்கள் சிலர் வார்னர், ஸ்மித் இருவரும் அணிக்குள் கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மிச்செல் ஸ்டார்க்,ஹாசல்வுட், பாட் கம்மின்ஸ், நாதன் லயன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காரணகர்த்தா
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு அவப்பெயர் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தவர் வார்னர் தான் என்பதால், அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று 4 வீரர்களும் வலியுறுத்தியதாக தெரிகிறது.
புறக்கணிக்க திட்டம்
மேலும், பந்தை சேதப்படுத்திய சம்பவத்தின் போது, வார்னரை அணியில் இருந்து நீக்க வேண்டும், இல்லாவிட்டால், தென் ஆப்ரிக்கா டெஸ்ட் போட்டியை புறக்கணிப்போம் என்று 4 பந்துவீச்சாளர்களும் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்தாதகவும் கூறப்படுகிறது.