பார்ம்
இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா விளையாடி உள்ள இரண்டு டெஸ்ட் போட்டியிலும் ஸ்மித் மோசமாகவே ஆடினார். முதல் டெஸ்டில் இவர் 1, 1 ரன்கள் எடுத்தார். இரண்டாவது டெஸ்டில் ஸ்மித் 0, 8 ரன்கள் எடுத்தார்.
எப்படி
இரண்டு முறை அஸ்வின் ஓவரில் ஸ்மித் அவுட் ஆனார்.ஸ்பின் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறார். என்னால் பந்துகளை எதிர்கொள்ள முடியவில்லை என்று ஸ்மித் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
மோசம்
இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்மித் மனரீதியான அழுத்தத்தில் இருக்க வாய்ப்பு உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வட்டாரங்கள் தெரிவிக்கிறது. ஸ்மித் மன ரீதியாக கஷ்டப்பட்டு இருக்க வாய்ப்புள்ளது. அவர் தனது குடும்ப உறுப்பினர்களை பார்த்து பல மாதம் ஆகிறது.
ஓய்வு
அவர் சரியாக ஓய்வு எடுத்து பல மாதங்கள் ஆகிறது. இதனால் மனரீதியாக அவர் கஷ்டப்பட வாய்ப்புள்ளது. இது அவரின் ஆட்டத்திலும் வெளிப்படுகிறது. அவர் தற்போது ஓய்வு எடுக்க வேண்டும். குடும்பத்தோடு நேரம் செலவழிக்க வேண்டும்.
மேக்ஸ்வெல்
ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் இதேபோன்ற சிக்கலில் தவித்து வந்தார். அது போன்ற சிக்கலை ஸ்மித் எதிர்கொண்டு வருகிறார். அவர் மீண்டும் பார்மிற்கு திரும்ப வேண்டும் என்றால் சில நாட்கள் ஓய்வு எடுப்பது அவசியம் என்று அவருக்கு நெருக்கமான வட்டங்கள் தெரிவிக்கிறது.