விராட் கோலி உதவி
விராட் கோலி, அனுஷ்கா சர்மாவும் தாராள நிதியுதவி அளித்துள்ளனர். இந்த வரிசையில் தற்போது கவாஸ்கரும், புஜாராவும் இணைந்துள்ளனர். சுனில் பிரதமர் நிதிக்கு ரூ. 35 லட்சமும், மகாராஷ்டிர முதல்வர் நிதிக்கு ரூ. 24 லட்சமும் அளித்துள்ளார். சத்தேஸ்வர் புஜாராவும் பிரதமர் நிதிக்கு நிதியுதவி அளித்துள்ளார். ஆனால் என்ன தொகை என்பதை அவர் பகிரங்கமாக சொல்லவில்லை.
கவாஸ்கர் அளித்த உதவி
கவாஸ்கர் அளித்த நிதியுதவி குறித்த விவரத்தை அவர் வெளியிடவில்லை. மாறாக முன்னாள் மும்பை கேப்டன் அமோல் மஜூம்தார்தான் இதுபற்றி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மஜூம்தார் போட்ட டிவீட்டில் சுனில் கவாஸ்கர் ரூ. 59 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதாக அறிந்தேன். மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அவரை நினைத்துப் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
புஜாரா விடுத்த கோரிக்கை
புஜாரா கூறுகையில், மக்களுக்காக போராடி வரும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அனைவருமே தியாக மனப்பான்மையுடன் தீவிரமாக களப் பணியாற்றி வருகின்றனர். அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன். எனது குடும்பமும், நானும் பிரதமர் நிதிக்கும், குஜராத் முதல்வர் நிதிக்கும் நிதியுதவி செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
அனைவரும் உதவ வேண்டும்
மேலும் அவர் கூறுகையில், களப் பணியாற்றும் அனைவருக்கும் நாம் நன்றியுடன் இருப்போம். அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும். நாட்டுக்கு பெருமளவில் நிதி தேவைப்படுகிறது. நாட்டுக்கு துணை நிற்போம் என்று கூறியுள்ளார். தொடர்ந்து இதுபோல பல முன்னாள், இந்நாள் வீரர்கள், வீராங்கனைகள் நிதியுதவி அளித்த வண்ணம் உள்ளனர்.