டி20 உலகக்கோப்பை
கிரிக்கெட் உலகில் பரம எதிரிகளாக பார்க்கப்படும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு விளையாட இருப்பதால் ரசிகர்களிடம் ஏகபோகத்திற்கு எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 என்னவாக இருக்கும், யார் வெற்றி பெறுவார்கள் என்ற கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன.
பேசப்படும் கருத்துகள்
பாகிஸ்தானை விட இந்திய அணி மிகவும் பலமான படையை கொண்டுள்ளது. குறிப்பாக டாப் ஆர்டரில் ரோகித், விராட், கே.எல்.ராகுல் மற்றும் பந்துவீச்சில் பும்ரா, ஜடேஜா என அனுபவ வீரர்கள் உள்ளனர். இது ஒருபுறம் இருக்க 3 முறை ஐசிசி கோப்பை வென்று கொடுத்த தோனி இந்திய அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். அவரின் வருகை கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
தோனியின் செயல்பாடு
இந்நிலையில் இந்த தொடரில் தோனியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் ? என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அதில் என்னைப் பொறுத்தவரை வழிகாட்டிகளால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. இது சீக்கிரமாக நடைபெற்று முடியும் போட்டி என்பதால், ஓய்வறையில் வேண்டுமானாலும் வீரர்களை தோனி தயார் செய்து அனுப்பலாம். களத்தில் எதுவும் செய்ய முடியாது.
தோனியால் பலன் இல்லை
ஒவ்வொரு போட்டிக்கு முன்னரும் அணிக்கு தேவையான வியூகம் அமைத்தல், ஆட்டத்தின் இடைவெளியின் போது கோலி மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு அட்வைஸ் கூறலாம். ஆனால் களத்தில் இருக்கும் அழுத்தம், ப்ளான்களை மாற்றுவது, ஆட்டத்தை கொண்டு செல்வது என அனைத்து வீரர்களிடம் மட்டுமே உள்ளது. எனவே தோனியால் அணியில் பெரியளவில் பலன் ஏதும் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.